Kanyakumari

News October 25, 2024

குமரி மாவட்டத்தில் 45 பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தர வதனம் இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை செய்தவர்கள் மற்றும் பொது மக்களை அச்சுறுத்தும் ரவுடிகள் என இந்த ஆண்டில் மட்டும் 45 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் இது தீவிரப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

News October 25, 2024

குமரி மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

image

குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “ குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை 1, சிற்றாறு அணை 2 ஆகிய அணைகளின் கொள்ளளவை விட நீர் அதிகமாகும் போது மேற்குறிப்பிட்ட அணைகளிலிருந்து உபரிநீர் திறந்து விடப்படும். எனவே தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

News October 25, 2024

குமரி மாவட்ட எஸ்.பி அறிக்கை வெளியீடு

image

குமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மழைக்காலமானதால் பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் பயணம் செய்யும்போது மெதுவாகவும் கவனமாகவும் செல்ல வேண்டும்; தண்ணீர் சூழ்ந்த இடங்களில் சென்று செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும்; மின்கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்; தேவையற்ற வதந்திகளை பரப்பக் கூடாது” என்று கூறியுள்ளார்.

News October 25, 2024

பெண்களுக்கு புகார் பெட்டி வழங்கிய குமரி கலெக்டர் மீனா

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் இன்று(அக்.,25) நடைபெற்ற நிகழ்ச்சியில், பணியிடங்களில் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக புகார் பெட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகு மீனா நிறுவனங்களுக்கு வழங்கி உரையாற்றினார்.

News October 25, 2024

குமரி நடத்துனரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்

image

சென்னை மாநகர பேருந்தில் நடத்துநராக பணியாற்றிய குமரி மாவட்டம் கீழ்குளத்தை சேர்ந்த ஜெகன்குமாருக்கும், போதையில் இருந்த பயணி கோவிந்தனுக்கும் இடையே நேற்று ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. இதில் கீழே விழுந்த நடத்துநர் ஜெகன் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், ஜெகன் குமாரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

News October 25, 2024

பேச்சிப்பாறை அணையிலிருந்து இன்று மாலை உபரிநீர் திறப்பு

image

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை பெருஞ்சாணி சிற்றாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று 42.60 அடியாக உள்ளது.தொடர்ந்து, இன்று மாலைக்குள் 43 அடியாகிவிடும் நிலையில், அணையில் இருந்து உபரி நீர் மாலை முதல் திறந்து விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 25, 2024

கன்னியாகுமரி மக்களுக்கு MLA வேண்டுகோள்

image

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முழு கொள்ளளவை எட்டியுள்ள பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது ஆகவே தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் MLA வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News October 25, 2024

உரிமம் இல்லாமல் பட்டாசு விற்றால் நடவடிக்கை!

image

உரிமம் இல்லாமல் பட்டாசு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கன்னியாகுமரி மாவட்டதீ யணைப்பு அதிகாரி சத்யகுமார் கூறியுள்ளார். நேற்று அவர் இது தொடர்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில், பட்டாசு கடையில் 2 வாயில்கள் இருக்க வேண்டும். விற்பனை நடக்கும்போது அவசர வெளியேறும் வாயில் திறந்திருக்க வேண்டும். பட்டாசு கடையில் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள் வைக்கக்கூடாது என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

News October 25, 2024

குழித்துறை அருகே வழக்கறிஞரிடம் ரூ.7 லட்சம் மோசடி

image

குழித்துறை அருகே சாங்கையை சேர்ந்தவர் பெனட்ராஜ், 45. வழக்கறிஞரான இவரிடம், விஜயகுமார் மற்றும் சுதிர் ஜேக்கப் ஆகியோர் ஆசை வார்த்தை கூறி பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக கூறி ரூ.7 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News October 25, 2024

குமரி அணைகளின் இன்றைய நீர் இருப்பு நிலவரம்

image

குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்: 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 15.32 மற்றும் 15.42 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 42.51அடி நீரும், 77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணியில் 64.66 அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 15.9 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 14.7 அடி நீரும் இருப்பு உள்ளது.

error: Content is protected !!