Kanyakumari

News October 31, 2024

குமரியில் இன்றைய (அக்.31) முக்கிய நிகழ்வுகள்

image

*காலை 8.15 மணிக்கு கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் சார்பில் கடமலைக்குன்றில் இந்திரா காந்தியின் 40வது நினைவு தினம் அனுசரிப்பு. 
*காலை 8.45 மணியில் இருந்து 9.45 மணிக்குள் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழாவு கொடியேற்றம்.*
மாலை 3 மணிக்கு தோட்ட வாரம் சந்திப்பில் சிக்மா மன்றம் சார்பில் தேசிய ஒற்றுமை தின மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிது.

News October 31, 2024

களியக்காவிளை தென்காசிக்கு கேரளா அரசு புதிய பஸ் சர்வீஸ்

image

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையிலிருந்து  தென்காசிக்கு கேரளா அரசு போக்குவரத்துக் கழகம் இன்று முதல் பேருந்து சேவையை தொடங்கியுள்ளது. தினசரி காலை 5:30 மணிக்கும் பிற்பகல் 2:40 மணிக்கும் இந்த பஸ் புறப்பட்டு செல்லும். தென்காசியில் இருந்து காலை 10:20 மணிக்கும் இரவு 7:00 மணிக்கும் இந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு களியக்காவிளை வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 30, 2024

கடற்கரை இலக்கிய வட்ட விருதுக்கு நூல்கள் அனுப்பலாம்

image

கடற்கரை இலக்கிய வட்டம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நூல்களை தேர்வு செய்து விருது வழங்கிவருகிறது. இந்த ஆண்டு விருதுக்கு 2023-ல் வெளிவந்த சிறுகதை, கவிதை, கட்டுரை மற்றும் நாவல் அனுப்பலாம். தங்கள் நூலின் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி நவம்பர் 15. அனுப்ப வேண்டிய முகவரி:இரையுமன் சாகர்,நவ ஜீவன் இல்லம்,இரையுமன்துறை,பூத்துறை அஞ்சல்,குமரி மாவட்டம் 629176.தொடர்புக்கு: 7558162827

News October 30, 2024

எம்.பி விஜய் வசந்த் தீபாவளி வாழ்த்து செய்தி

image

புத்தாடை அணிந்து, இனிப்புகள் பகிர்ந்து, தீபம் ஏற்றி, பட்டாசு கொளுத்தி ஜாதி மத பேதமின்றி அனைவரும் கொண்டாடும் இந்த திருநாளில் உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி மற்றும் சமூகத்தில் எழுச்சி ஏற்பட வேண்டுமென வாழ்த்துகிறேன். இனிப்பாக, வண்ணமயமாக, புத்துணர்ச்சியுடன் இந்த பண்டிகை காலம் அமையட்டும். பிரிவினை மற்றும் ஏற்றதாழ்வுகளை நரகாசுரனை போல் அழித்திடுவோம் என குமரி எம்.பி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News October 30, 2024

நாளை மறுநாள் குமரி தமிழகத்துடன் இணைந்த நாள்

image

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் 1956ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி இணைந்தது. இந்த விழாவை அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. இந்த விழா கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதனை ஒட்டி இந்த போராட்டத்திற்கு தலைமை வகித்த மார்சல் நேசமணியின் நினைவு மண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

News October 30, 2024

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 15 ரோந்து படைகள் அமைப்பு

image

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது இதனை ஒட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள ஐந்து போலீஸ் சப் டிவிஷனில் 15 ரோந்து படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் நேற்று தெரிவித்தார்.

News October 29, 2024

ஆட்சியரிடம் மனு அளித்த நாகர்கோவில் எம்.எல்.ஏ

image

குமரி மாவட்ட ஆட்சித் தலைவர் வழியாக தமிழக முதல்வருக்கு நாகர்கோவில் எம்.எல்.ஏ M.R. காந்தி மனு அளித்தார். அதில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான மணவாளகுறிச்சி I.R.E.L நிறுவனத்தை பாதுகாக்கவும், இதன் செயல்பாட்டை முடக்கும் விதத்தில் நடத்தப்படும் போராட்டத்தை தடுக்கவும், தமிழக அரசால் வழங்கப்பட்ட தாது மணல் எடுக்கும் செயலை செயல்படுத்தவும் கருத்து கேட்டு கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

News October 29, 2024

கொட்டாரம் அருகே உடல் நசுங்கி பழ வியாபாரி பலி

image

குமரி மாவட்டம் கொட்டாரம் மேல தெருவைச் சேர்ந்தவர் தங்கப்பன் என்ற பகவதி(70). பழ வியாபாரியான இவர் இன்று சந்தையில் பழம் வாங்கிவிட்டு சைக்கிளில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். கொட்டாரம் அருகே உள்ள ரவுண்டான சந்திப்பில் சென்று கொண்டிருக்கும்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரி இவர் மீது மோதியது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் லாரியின் சக்கரம் ஏறி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

News October 29, 2024

தக்கலை அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி

image

கல்லன்குழி புலவன் புலவன் விளையை சேர்ந்த ராஜேந்திரன், மனைவி தங்க லீலா (57). இவர் வீட்டு வேலைக்கு சென்று வந்தார். இவர் இன்று அதிகாலை 4.30 மணிக்கு முண்ட விளையில் வைத்து கருங்கல் செல்லும் பஸ்சில் ஏற முயன்றபோது தடுமாறி கீழே விழுந்தார். இதில் பஸ் சக்கரம் அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, தக்கலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News October 29, 2024

குமரியில் தப்பி ஓடிய கைதி வள்ளியூரில் கைது

image

குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்பவரை போலீசார் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்திருந்தனர். உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் சதீஷ் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆசாரிபள்ளம் மருத்துவமனையிலிருந்து தப்பித்து ஓடிய கைதி சதிஷ் – யை இன்று தனிப்படை போலீசாரால் வள்ளியூரில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.

error: Content is protected !!