India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1967 அல்லது 18004255901 அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

உங்கள் கனவு சொல்லுங்கள் திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 97 ஆயிரத்து 784 குடும்பங்களில் கணக்கெடுப்புநடைபெற இருக்கிறது. அவர்களை சந்தித்து கோரிக்கைகள், தேவைகளை அறிந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இதற்காக 1507 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் 30 குடும்பங்களை ஒவ்வொருவரும் கணக்கெடுப்பார்கள் என குமரி மாவட்ட அழகுமீனா நேற்று தெரிவித்துள்ளார்.

நீங்க நிலம் அல்லது வீடு வாங்க போறீங்களா? பத்திரபதிவு செய்ய எவ்வளவு கட்டணம்ன்னு தெரியலையா? இதற்காக அலுவலரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <

குமரி மாவட்டம், உண்ணாமலை கடை பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (60). இவர் நேற்று முன் தினம் முட்டை விற்பதற்காக உண்ணாமலை கடை பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு நின்று உள்ளார். அப்போது முதலார் பகுதியை சேர்த்த ஜெனிஸ் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதி உள்ளது. இதில் சரஸ்வதி படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் போரில் மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10-ஆம் வகுப்பு படித்தவர்கள் இங்கு<

கடுக்கரை பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (44). இவர் அப்பகுதியில் உள்ள தம்பரான் கோயில் – முத்தாரம்மன் கோயிலில் அறங்காவலராக இருந்து வந்தார். இந்நிலையில் அவர் சாமிகளுக்கான 45 பவுன் நகைகளில், 21 பவுன் நகைகளை திருடி அடகு வைத்த விவரம் தற்போது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து தற்போதைய கோயில் அறங்காவலர் சேத்திரபாலன் போலீசில் அளித்த புகாரின் பேரில் அய்யப்பனை நேற்று (ஜன.9) போலீசார் கைது செய்தனர்.

குமரி மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்துள்ளது. இதில் தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும்.

மருங்கூர் பகுதியை சேர்ந்தவர் அகிலாஸ் (37). கடந்த 2015-ல் லைசா என்ற பெண்ணை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த அகிலாஸ் 2023-ல் ஒரு பெண்ணுடன் பழகி அவரையும் கொலை செய்தார். இந்த கொலை வழக்கிலும் ஜாமீனில் வந்த அகிலாஸ் 6 மாதங்களாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் நேற்று முன் தினம் செண்பகராமன்புதூரில் வைத்து அகிலாஸை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ஆரல்வாய்மொழி சாலமன் நகரைச் சேர்ந்தவர் ராஜன் (43). இவர் ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் விபத்தில் சிக்கி வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் ஜன.8 அன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரல்வாய்மொழி சாலமன் நகரைச் சேர்ந்தவர் ராஜன் (43). இவர் ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் விபத்தில் சிக்கி வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் ஜன.8 அன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.