India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மாவட்டத்தில் 97 டாஸ்மாக் கடைகள் உள்ளன. பண்டிகை நாட்களில் மதுபானங்கள் விற்பனை அதிகமாக இருந்தது. பொங்கல் பண்டிகை முதல் நாள் ஜன.14ம் தேதி ரூ.3.01 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. பொங்கல் நாளன்று ரூ.4.10 கோடி என மொத்தம் இரண்டு நாட்களில் மட்டும் ரூ.7.11 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

குமரி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <

தக்கலை அருகே கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (24). பட்டதாரியான இவர் கட்டிட வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண் திடீரென ஸ்ரீகாந்திடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த ஸ்ரீகாந்த் நேற்று முன் தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நெல்லை- அம்பை பகுதியை சேர்ந்தவர் விஷ்வா (23). வேத பாடசாலை மாணவரான இவரும், அதே பகுதியை சேர்ந்த 4 பேரும் பூஜைக்காக நேற்று முன் தினம் திற்பரப்பு அருவிக்கு சென்றனர். நேற்று பூஜைகள் முடிந்ததும் தடுப்பு அணைக்கு குளிக்க சென்றனர். குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விஷ்வா தண்ணீரில் மூழ்கினார். உடனே அவரை மீட்டு GH-ல் சேர்த்த நிலையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

அனுமதியற்ற மனைப்பிரிவு வரமுறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், குமரி மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

திட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் மாகின் (59). ஆட்டோ டிரைவரான இவர் ஆட்டோவில் நேற்று நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார். மேல புத்தேரி அருகே வரும்போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. படுகாயம் அடைந்த மாகின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிர வாக்காளர் சிறப்பு திருத்த முகாம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் விடுபட்டவர்கள் மற்றும் புதியவர்கள் தங்கள் பெயர்களை இணைத்துக் கொள்ள ஜனவரி 18-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகு மீனா கேட்டுக் கொண்டுள்ளார்.

குமரி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <

வடக்கு சூரங்குடியைச் சேர்ந்தவர் வினிஷ் (16). இவர் நேற்று மதியம் வீட்டில் சாப்பிட்டு விட்டு நண்பர்களுடன் கார்த்திகை வடலி குளத்திற்கு குளிக்க சென்றார். அப்போது அவர் குளத்தில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராஜக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.

பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் (06160) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ஜன.18 (ஞாயிறு) அன்று மாலை 5 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக திங்கள் காலை 4 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.