India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி இருப்பதை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்த கோரி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்களின் படைப்புகளை சந்தைப்படுத்துவதற்காக, ஓவிய சிற்பக் கண்காட்சி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட உள்ளது. ஓவியர்கள் தங்கள் விபர குறிப்புடன் படைப்புகளின் எண்ணிக்கை விபரங்களுடன், காஞ்சிபுரத்தில் உள்ள சதாவரம் பகுதியில் உள்ள கலை பண்பாட்டு துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், உள்ளிட்ட 5 ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், வாரந்தோறும் சில ஊராட்சிகளை தேர்வு செய்து, வரவு – செலவு கணக்குகளை சமூக தணிக்கை செய்து, மாநில ஊரக வளர்ச்சி தணிக்கை சங்கத்திற்கு, அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கம். தற்போது, 11ஆவது சுற்றுக்கு கூரம், ஒழுக்கோல்பட்டு, சின்னிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளில், நாளை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில், பல்வேறு அடிப்படை வசதிகளுக்கான 196 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு அத்தீர்மானங்கள் குறித்து மாமன்ற உறுப்பினர்களின் காரசாரமான விவாதங்களுக்குப் பிறகு 191 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வருகை பதிவேடு மற்றும் மேயர் வர தாமதமானதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதில் மாமன்ற உறுப்பினர்கள் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் மேயர் மகாலட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பல ஆண்டுகளாக சாலை வசதி மேற்கொள்ளப்படாமல், பராமரிப்பின்றி உள்ள அண்ணா பூங்கா, மாநகராட்சி வாகன நிறுத்துமிடம், கட்டண டெண்டர் விவகாரம் என பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை முன்வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடும் வாக்குவாதம் மற்றும் சலசலப்பிற்கு பஞ்சமின்றி இக்கூட்டம் நிறைவடைந்தது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர்வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில், விவசாய தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் விவசாய நிலம் வாங்குவதற்கு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாயிலாக குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், நிலம் வாங்குவதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக் கூட்டம் நேற்று (நவ.20) நடைபெற்றது. இதில், மாமன்ற உறுப்பினர்கள் பேசும்போது, குறிப்பாக தங்களது வார்டு பகுதிகளில் பல ஆண்டு காலமாக தீர்க்கப்படாத பல்வேறு அடிப்படை தேவைகளை கூட பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திற்கு எடுத்துரைத்தும், கோரிக்கைகள் வைத்தும் அவை இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பது குறித்து கேள்விகளை எழுப்பினர். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.
காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மேயர் மகாலட்சுமி தாமதமாக வந்தார். அதன்பின், தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடி கூட்டம் தொடங்கியது. முன்னதாக, உயிரிழந்த முன்னாள் மாமன்ற உறுப்பினருக்கு மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மெளன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகளும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் நேற்று (நவ.20) நடைபெற்றது. முன்னதாக, கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாமன்ற உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்யும் வருகைப் பதிவிற்கு பதிலாக, பேப்பர்களில் கையொப்பமிட சொல்லியதால் வருகைப் பதிவு குறித்து மாமன்ற உறுப்பினர்கள் பலர் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பமும் நிலவியது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக் கூட்டம் நேற்று (நவ.20) நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், மேயர் மகாலட்சுமி உரிய நேரத்திற்கு கூட்டரங்கிற்கு வரவில்லை. காலதாமதமாக வந்ததால், அதிருப்தி அடைந்த மாமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து கேள்விகளை மாநகராட்சி ஆணையர் நவேந்திரனிடம் கேட்டு சற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், மாநகராட்சி கூட்டம் தொடங்கும் முன்னதாகவே சலசலப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.