Kanchipuram

News November 26, 2024

ஆபாச படங்கள், வீடியோக்களை வெளியிட்டவர் கைது

image

ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டிய காஞ்சிபுரத்தைச் சார்ந்த பாண்டியன் (30) என்பவரை புதுச்சேரி இணையவழி போலீசாரால் கைது செய்தனர். விசாரணையில், காஞ்சனா என்ற பெண்ணின் 2ஆவது கணவர் தான் இத்தகைய செயலில் ஈடுபட்டதும், அவருக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், அவரை நேற்று (நவ.25) நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி காலப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

News November 26, 2024

காஞ்சிபுரத்தில் 4,600 பேர் விண்ணப்பித்து உள்ளனர்

image

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் மாவட்டத்தில் காலியாக உள்ள 51 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதற்கான நேர்முக தேர்வானது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் எதிரே உள்ள கூட்டுறவு அலுவலக வளாகத்தில் நேற்று  துவங்கியது. இதில் 4,600 பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்றும், 10 நாட்களுக்கு நடைபெறும் இந்த நேர்முக தேர்வில், நேர்காணலும் நடைபெறும் என்றும்  இணைப்பதிவாளர் ஜெயஶ்ரீ தெரிவித்துள்ளார். 

News November 26, 2024

தேசிய அறக்கட்டளைக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மத நல்லிணக்கத்திற்கான தேசிய அறக்கட்டளைக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் நேற்று நிதி வழங்கி, தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சத்யா ஆகியோர் உள்ளனர்.

News November 25, 2024

பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பாலின உறுதிமொழி

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பாலின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., தலைமையில் இன்று (நவ.25) அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

News November 25, 2024

காஞ்சிபுரத்தில் 29ஆம் தேதி கனமழை பெய்யும்

image

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், வரும் 29ஆம் தேதி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 25, 2024

காஞ்சி:கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பட்டறை

image

காஞ்சி கிரிக்கெட் அகாடமி சார்பில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் உள்ள காஞ்சி கிரிக்கெட் அகாடமி உள்ளரங்கு பயிற்சி கூடத்தில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் போட்டிக்கு தயாராகுதல் மற்றும் அதற்கு தேவையான மனநிலை என்கிற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நேற்று நடந்தது. இதில், காஞ்சிபுரம், வந்தவாசி, செய்யாறு, வாலாஜாபாத், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 52 பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

News November 25, 2024

காஞ்சிபுரத்திற்கு இலவச அலைபேசி எண் அறிவிப்பு

image

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கால்நடை பராமரிப்பு துறையின் 148 கால்நடை மருந்தகங்கள் உள்ளன. அரசு கால்நடை மருத்துவமனைக்கு கால் நடைகளை அழைத்து வர இயலாதவர்களுக்காக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு முறையே 3 ஆம்புலன்ஸ்களும், 4 ஆம்புலன்ஸ்களும் வழங்கப்பட்டன.கால்நடை வளர்ப்போர் கால்நடைகளின் மருத்துவத்திற்கு 1962 என்ற இலவச எண்ணை இந்த இரு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

News November 25, 2024

புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி

image

காஞ்சிபுரத்தில் மண்புழு தாத்தாவின் மண் நல புரட்சிப்பாதை புத்தக வெளியீட்டு விழா நேற்று  நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி, ” இந்நூலினை எழுதிய பேராசிரியர் இஸ்மாயில் சுல்தான் தமிழ்நாட்டிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். இவர் மாணவர்கள் மீதும், விவசாயிகள் மீதும் மிக அக்கறை கொண்டவர். சத்தான உணவைப் பற்றி எடுத்துக்கூறும் இந்நூலை படித்து தெரிந்து கொள்ளுங்கள்” என கூறினார். 

News November 24, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி வழங்க தேர்வு முகாம்

image

காஞ்சிபுரத்தில், கை மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், பார்வைத்திறன் குறைபாடுடையோர் மற்றும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு Tele Medicine பயிற்சி வழங்க தேர்வு முகாம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் 25.11.2024 நாளை காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் பங்குபெற 18-35 வயதுடையவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News November 24, 2024

வெற்றி பெற்ற காஞ்சிபுரம் அணிக்கு கனிமொழி எம்.பி வாழ்த்து

image

கடந்த 2 நாட்களாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் ‘கலைஞர் 100’ வினாடி வினா போட்டி நடைபெற்றது. இதில், இறுதிப் போட்டியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில், காஞ்சிபுரம் அணி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளது. இதற்கு திமுக துணைச் செயலாளர் கனிமொழி, காஞ்சிபுரம் அணிக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.  

error: Content is protected !!