India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காமாட்சி அம்மன் கோயில் உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டதில் ரூ.57,36,782 பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும் தங்கம் 178 கிராமும்,வெள்ளி 611கிராமும் காணிக்கை கிடைத்துள்ளது. இதில் செயல் அலுவலர் ச.சீனிவாசன், கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயர், மணியக்காரர் சூரியநாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் கண்காணிப்பகம் சார்பில் பழங்குடியின குடும்பங்களைச் சேர்ந்த 9 குடும்பங்களுக்கான வீடுகள் புதுப்பிக்கப்பட்டு அவற்றை திறந்து வைக்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு புஞ்சை அரசந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் பி.மீனாபழனி தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.மோகன் முன்னிலை வகித்தார். குழந்தைகள் கண்காணிப்பகத்தின் நிர்வாகி து.ராஜி வரவேற்றார்.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள 2500 உறுப்பினர்களில் சுமார் 975 உறுப்பினர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக ரூ.4000 கொரோனா கால அட்வான்ஸ் கடனாக அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் பெற்றனர். அந்த கடனை திரும்ப பெற வேண்டுமென உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதன் பெயரில் கைத்தறி துணி நூல் துறை இயக்குனர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் இன்று (19-12-2024) 75ஆவது ஆண்டு விழா வெகு விமர்சையாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரியில் படிக்கின்ற அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். மேலும், இவ்விழாவில் கல்லூரி முதல்வர் சிறப்பு உரை ஆற்றினார். விழாவில் புதிதாக வடிவமைக்கப்பட்ட கல்லூரி இலச்சினை, கல்லூரி முதல்வர் திறந்து வைத்தார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை இழிவுபடுத்தும் விதமாக பேசியது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது பேசியதை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அமித்ஷாவை பதவி விலக வலியுறுத்தி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சுந்தர் தலைமையில் இன்று (டிச.19) கண்டன முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகள், நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, இப்பகுதியில் உள்ள கட்டடங்களுக்கு சொத்து வரி, காலி மனைகளுக்கான வரி, தொழில் வரி, பாதாள சாக்கடை உள்ளிட்ட வரி இனங்கள், மாநகராட்சி கருவூலம் மற்றும் வரிவசூல் மையங்கள் வாயிலாக வசூலிக்கப்படுகிறது. வரி இனங்களை செலுத்த வலியுறுத்தி மாநகராட்சி சார்பில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று (டிச.18) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் சிரமம் அடைகின்றனர். மேலும், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருங்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 1,69,200 பசு, எருமை, கன்று ஆகிய கால்நடைகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், 6ஆம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி டிச.16ஆம் தேதி தொடங்கி 21 நாட்களுக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், டிச.16க்கு பதிலாக, ஜன.3ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா முதல்நிலைப் போட்டி 21.12.2024 அன்று மாமல்லன் மெட்ரிக் பள்ளியில் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை நடக்கிறது. கலந்துகொள்ள Google Form மூலம் 19.12.2024 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இன்று (டிச.18) கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குடையுடன் வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.