India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் புதுப்பாக்கத்தில் குளத்தில் 3 நாட்களாக இறந்து கிடந்த முனுசாமி என்பவரின் உடலை மீட்ட போலீசார், விசாரணையில், முனுசாமி சில தினங்களுக்கு முன்பு அவருடைய தந்தை, தாயை மது போதையில் தகராறு செய்து அடித்துள்ளார். அப்போது தந்தை காத்தவராயன் கட்டையால் மகன் முனுசாமியை தாக்கிய போது அவர் இறந்துள்ளார். அதனை மறைப்பதற்கு காத்தவராயன் மைத்துனர் ராஜேஷ் உடன், முனுசாமி உடலை கல்லை கட்டி குளத்தில் வீசி உள்ளார்.
பாலுசெட்டி போலீசார் நேற்று குளத்தில் வெட்டுகாயங்களுடன் புதுப்பாக்கதில் ஏரியில் மிதந்த சடலத்தை மீட்டு விசாரித்தனர். இந்நிலையில், இறந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பது தெரிந்தது. அவரது தந்தை காத்தவராயனிடம் விசாரித்தபோது, காத்தவராயன் மற்றும் அவரது மனைவியை முனுசாமி அடித்ததால், தனது மைத்துனர் ராஜேஷ் உடன் சேர்ந்து கொலை செய்ததாக காத்தவராயன் ஒப்புக்கொண்டனர். போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது சின்ன குளம். கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக, குளம் முழுவதும் நிரம்பி இருந்த நிலையில், நேற்று அதில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதந்தது. தகவலின் பேரில், பாலுச்செட்டி போலீசார் அந்த நபரின் உடலை மீட்டபோது உடலில் வெட்டு காயங்களும், இடுப்பு பகுதியில் சிமெண்ட் கல்லால் கட்டப்பட்டு வீசப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் இன்று (டிச.21) மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பழையசீவரம் துணை மின்நிலையம் ஓரிக்கை துணை மின் நிலையம்மற்றும் ஓரிக்கை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஏகனாம்பேட்டை, மேலச்சேரி, பழையசீவரம், வாலாஜாபாத், தென்னேரி, ஊத்துக்காடு, திருமுக்கூடல், சின்ன காஞ்சிபுரம், ஐயம்பேட்டை, செவிலிமேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
குன்றத்தூர் அருகே பழந்தண்டலத்தில் உள்ள தனியார் கம்பெனியில், பீகார் மாநிலத்தை சேர்ந்த மஞ்சய் பஸ்வான் (35) வேலை செய்து வந்தார். உடன் வேலை செய்யும் நேபாளம் நாட்டை சேர்ந்த ஜித்தையின் மகரா(22),ராம்(20) ஆகியருடன் நேற்று தகராறு ஏற்பட்டது. மகரா கத்தியால் குத்தியதில் மஞ்சய் பஸ்வான் சம்பவ இடத்திலேயே பலியானார்.குன்றத்தூர் போலீசார் ஜித்தையன் மகரா மற்றும் ராம் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற விவசாயிகள் மாதாந்திர கூட்டத்தில் இன்று கூட்டத்திற்கு வராத மாவட்ட அதிகாரிகளை கணக்கெடுத்து அவர்களுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் வழங்குமாறும், அதற்கான கணக்கெடுப்புகளை எடுத்து தன்னிடம் சரி பார்த்துக் கொண்ட பின் அவர்களுக்கு வழங்க வேண்டும் என உடன் இருந்த அதிகாரிக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம் காமகோடி பீடத்தின் 68 வது பீடாதிபதியகா இருந்து வந்த ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 31வது வார்ஷிக ஆராதனை மகோற்சவம் வரும் டிச.27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற இருப்பதாக சங்கர மரத்தின் மேலாளர் சுந்தரேசன் ஐயர் அவர் தெரிவித்துள்ளார். டிச.25 ஆம் தேதி புதன்கிழமை தொடங்கி டிச.27 ஆம் தேதி வரை 3 நாட்களிலும் வேதபாராயணம், ஆன்மீக சொற்பொழிவுகள், கீதாஞ்சலி நடைபெறும் என அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2023 நவம்பர் முதல் 2024 நவம்பர் வரை, உத்திரமேரூர் அடுத்த காட்டுப்புதுார் கிராமத்தில் உள்ள ‘யங் பிராண்ட் அபாரல் லிமிடெட்’ உள்ளிட்ட 5 தொழிற்சாலைகளில், பல்வேறு வகையிலான மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், கோடிக்கணக்கான ரூபாய் இந்த மோசடி சம்பவங்களால், தொழிற்சாலைகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஸ்டேட் வங்கி இந்த நிதியாண்டில் மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 70 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.8 கோடி வரை கடன் வழங்கியிருப்பதாக காஞ்சிபுரம் கிளையின் முதன்மை மேலாளர் ச.மணிகண்டன் தெரிவித்தார். தவணைக்கடன்,மூலதனக்கடன் ஆகியனவும் வழங்கி ஸ்டேட் வங்கி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பான சேவை வழங்கி வருவதாகவும் ச.மணிகண்டன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றிரவு பல இடங்களில் லேசான மழை பெய்தது. குறிப்பாக, அய்யம்பேட்டை, ஊத்துக்காடு, வாலாஜாபாத், அய்யங்கார்குளம், சிறுவாக்கம், நெட்டப்பேட்டை, வெம்பாக்கம், வேடல், ஏனாத்தூர், மீனாட்சி மருத்துவ கல்லூரி, பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 3 மணி வரை சாரல் மழை பெய்து வருகிறது. மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பாக இருங்கள். உங்க ஏரியாவில் மழையா?
Sorry, no posts matched your criteria.