Kallakurichi

News August 15, 2024

இளநிலை உதவியாளருக்கு நற்சான்று வழங்கிய ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 78வது சுதந்திர தின விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் ராஜமாணிக்கம் என்பவர் சிறப்பாக பணியாற்றியமைக்கான நற்சான்றிதழை இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்திடமிருந்து பெற்றுக் கொண்டார்

News August 15, 2024

திருக்கோவிலூர் டிஎஸ்பியாக பார்த்திபன் நியமனம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த மனோஜ் குமார் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், திருக்கோவிலூர் டிஎஸ்பி பணியிடம் காலியாக இருந்து வந்தது. இந்த நிலையில் திருக்கோவிலூர் டிஎஸ்பியாக பார்த்திபன் என்பவரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

News August 15, 2024

கள்ளக்குறிச்சியில் விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2024-25 முழுவதும் செப்டம்பர் மற்றும் அக்டோபரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஐந்து பிரிவுகளில் 27 விளையாட்டுகள் 53 வகையில் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேற்று தெரிவித்துள்ளார்.

News August 14, 2024

திருக்கோவிலூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பூமாரி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற துரிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சாலையின் அருகே உள்ள புளிய மரத்தின் மீது அதிவேகமாக மோதியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 14, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் உள்ளிட்டவை சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பிரசாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 14, 2024

காளான் வளர்ப்பு மையத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வட்டத்திற்கு உட்பட்ட சாத்தனூர் கிராமத்தில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள காளான் வளர்ப்பு மையத்தினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று நேரில் பார்வையிட்டு காளான் வளர்ப்பு செயல்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

News August 14, 2024

கள்ளக்குறிச்சி தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக சக்தி என்பவர் இன்று பொறுப்பேற்று கொண்டார். தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்ட சக்தி என்பவருக்கு சக காவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்ட தனி பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

News August 14, 2024

சிறப்பு தொழில் கடன் விழா குறித்து ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கிளை அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா ஆக.19ஆம் தேதி முதல் செப்டம்பர் 6ம் தேதி வரை நடக்கிறது. 23-ஏ, ரங்கநாதன் தெரு, ஹோட்டல் உட்லண்ட்ஸ் காம்பளக்ஸ், முதல் மாடி, சென்னை – திருச்சி மெயின் ரோடு, விழுப்புரம் முகவரியில் இயங்கும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கிளை அலுவலகத்தில் சிறப்பு தொழில் கடன் விழா நடக்கிறது.

News August 14, 2024

கிராம சபை கூட்டம் – மக்கள் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை சுதந்திர தினத்தை ஒட்டி 412 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து பொதுமக்களும் பங்கேற்று தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கலாம். எனவே, பொதுமக்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என ஆட்சியர் பிரசாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 13, 2024

ஆகஸ்ட் 16 மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் விளம்பாவூர், புதுப்பட்டு, கரியாலூர், அம்மையகரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது. இதில் 15 துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!