Kallakurichi

News January 29, 2026

கள்ளக்குறிச்சி: இனி ரேஷன் கடைக்கு செல்ல வேண்டாம்!

image

மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News January 29, 2026

ஒரு நாள் இயற்கை முகாமினை தொடங்கி வைத்த ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி ஆட்சியரக வளாகத்தில் சுற்றுச்சூழல் கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான
ஒரு நாள் இயற்கை முகாமினை ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்,
இன்று (ஜன.29) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு கையேடு அடங்கிய தொகுப்புகளை ஆட்சியர் வழங்கினர்.

News January 29, 2026

கள்ளக்குறிச்சி: உங்கள் விரல் நுனியில் வங்கி கணக்கு!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News January 29, 2026

கள்ளக்குறிச்சி: ஒரே கிளிக்… 40 லட்சம் அபேஸ்!

image

மஞ்சப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த யாதவராஜ், குவைத்தில் எலக்ட்ரீஷியனாகப் பணிபுரிந்து மாதம் 1 லட்சம் ஈட்டி வந்தார். சமூக வலைதளத்தில் வந்த லிங்க் மூலம் ‘டேட்டிங் ஆப்’ ஒன்றில் நுழைந்த இவரிடம், பல்வேறு காரணங்களைக் கூறி மர்ம நபர்கள் ரூ.40,70,470 பறித்துள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த யாதவராஜ், இதுகுறித்து நேற்று சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார்.

News January 29, 2026

கள்ளக்குறிச்சி: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

image

கள்ளக்குறிச்சி மக்களே, உங்களுக்கு தேவையான

1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த <>லிங்கில் கிளிக்<<>> செய்து அப்ளை செய்யவும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க.

News January 29, 2026

உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு!

image

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர சைடு கட்டை ஓரமாகப் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் கார் பலத்த சேதமடைந்த போதிலும், ஓட்டுநர் எவ்வித காயமுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் காரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

News January 29, 2026

உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு!

image

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர சைடு கட்டை ஓரமாகப் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் கார் பலத்த சேதமடைந்த போதிலும், ஓட்டுநர் எவ்வித காயமுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் காரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

News January 29, 2026

கள்ளக்குறிச்சியில் கோர விபத்து!

image

கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் திருக்கோயிலூர் பகுதியில் துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் தன்னுடன் வேலை பார்க்கும் கார்த்திக் என்பவரை சுந்தரேசபுரத்தில் விட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக சுந்தரேசபுரம் மேட்டு காலனி பகுதியில் 27-ஆம் தேதி வந்து கொண்டிருந்தார். அப்போது முன்னாள் சென்ற டிராக்டர் மீது பைக் மோதியதில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News January 29, 2026

பைக் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் இளைஞர் படுகாயம்

image

ஆர்.ஆர்.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வினித் நேற்று தனது உறவினர் திருமணத்திற்காக உளுந்தூர்பேட்டை சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வருவதற்காக பைக்கில் ஆர்.ஆர்.குப்பம் பிரிவு சாலை அருகே வந்தபோது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் வினித் தலையில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரில் கார் ஓட்டுனர் நவநீதகிருஷ்ணன் மீது இன்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

News January 29, 2026

கள்ளக்குறிச்சி: இளம்பெண் துடிதுடித்து பலி!

image

கள்ளக்குறிச்சி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் மற்றும் அவரது மனைவி இருவரும் நேற்று வேலைக்கு சென்றுள்ளனர். மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள மின்விசிறியில் முத்துக்குமரனின் 2வது மகள் நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!