Erode

News January 26, 2025

ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்ட தலைவர்கள் நியமனம்

image

தமிழக பாஜகவில், அமைப்பு தேர்தல் மூலம் மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட தலைவர்களை பட்டியலை மாநில தேர்தல் அதிகாரியும், மாநில துணை தலைவருமான எம்.சக்கரவர்த்தி அறிவித்துள்ளார். இதில் ஈரோடு வடக்கு மாவட்ட பாஜக புதிய மாவட்ட தலைவராக எஸ்.எம்.செந்தில்குமார் மற்றும் தெற்கு மாவட்ட பாஜக புதிய மாவட்ட தலைவராக எஸ்.எம்.செந்தில் செய்யப்பட்டுள்ளனர்.

News January 26, 2025

ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தவிர திமுக செய்தது என்ன?

image

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, திமுக 1000 ரூபாய் வழங்கும் திட்டம் தவிர என்ன செய்தார்கள் எதுவுமில்லை. பேரிடரின் போது உரிய இழப்பீடு கூட பெறமுடியாமல் மாநில உரிமைகள் பற்றி பேசுவது எந்த விதத்தில் நியாயம். நாதக வீதிவீதியாக வந்து வாக்கு கேட்கிறோம். திமுக வந்து கேட்கவில்லை. உங்கள் மீது நம்பிக்கை வைத்து தான் தொடர்ந்து தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம் என்றார்.

News January 25, 2025

நாதக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

image

ஈரோடு கிழக்கு தொகுதி நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மீது மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு – காளை மாட்டு சிலை அருகே தேர்தல் நடத்தை விதிகளை மீறி நாதகவினர் பிரச்சாரம் செய்ததாக இன்று நாதகவினர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, ஈரோடு கிழக்கு தொகுதி நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 35 பேர் மீது, ஈரோடு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News January 25, 2025

ஈரோடு மக்களே! உங்கள் ஊர் செய்திகளை பதிவிடுங்க

image

நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் ஊரில் கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சிகளும், நடைபெற உள்ளன. இந்த நிகழ்வுகளை வே2நியூஸில் பதிவிட்டு, உங்கள் ஊர் செய்திகளை அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். எப்படி அனுப்புவது என்று தெரியலையா? இந்த <>லிங்கை <<>>க்ளிக் பண்ணுங்க.

News January 25, 2025

கூடுதலாக 12 சோதனை சாவடிகள் அமைப்பு

image

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. எனவே 3 பறக்கும் படை, 3 நிலை கண்காணிப்பு குழுக்கள், ஒரு வீடியோ குழு அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தற்காலிகமாக 12 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News January 25, 2025

ஈரோட்டில் மழைக்கு வாய்ப்பு!

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் ஜன.31ஆம் தேதி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், ஈரோடு மாவட்டத்தில் ஜன.31ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News January 25, 2025

ஈரோடு மாவட்ட அணைகளின் நீர் இருப்பு நிலவரம்

image

பவானிசாகர் அணையின் மொத்த கொள்ளளவான 105 அடியில் தற்போது 93.99 அடியாகவும் நீர் வரத்தானது 920 கன அடியாகவும் நீர் வெளியேற்றமானது 900 கன அடியாகவும் உள்ளது. குண்டேரிப்பள்ளம் அணையின் மொத்த கொள்ளளவான 41.75 அடியும் நிரம்பி வழிகிறது. பெரும்பள்ளம் ஆணையின் மொத்த கொள்ளளவான 30.84 அடியில் 20.08 அடியும், வரட்டு பள்ளம் அணையின் 33.46 அடியில் 30.61 அடியாக நீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 25, 2025

ஈரோடு வர பயப்படும் அமைச்சர்கள்: நாதக வேட்பாளர்

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாதக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமியை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்: ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக சார்பில் அமைச்சர் பட்டாளம் வாக்குக் கேட்டு வந்தால், ஒன்றரை ஆண்டுக்கு முன் கொடுத்த வாக்குறு​திகள் என்னவா​யிற்று என்று மக்கள் கேள்வி கேட்பார்கள். அதற்கு பயந்தே அமைச்​சர்கள் இந்த பக்கம் வர​மாட்​டார்​கள்​ என தெரிவித்துள்ளார்.

News January 25, 2025

1,194 பேர் தேர்தல் பணிக்கு நியமனம்

image

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலுக்காக மொத்தம் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 20% கூடுதலாக சேர்த்து முதன்மை அலுவலர்கள், முதல் நிலை அலுவலர்கள்,2-ம், 3ம் நிலை அலுவலர்கள் தலா 284 பேரும், 1,200 வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளுக்கு 4-ம் நிலை அலுவலர்கள் 58 பேரும் என்று மொத்தம் 1,194 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.

News January 25, 2025

கருத்து கணிப்பு வெளியிட தடை

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகின்ற 48 மணி நேரத்திற்குள் ஏதேனும் கருத்துக்கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்திலும் காட்சிப்படுத்த கூடாது. இதனை மீறுபவர்களுக்கு 2 வருட சிறை தண்டனை (அ) அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!