India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தல் பிரச்சாரம் என்றால் வேட்பாளர் வாகனத்தில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பது வழக்கம். ஆனால் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் நடந்து சென்று ஓட்டு கேட்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் முத்துசாமி, மக்களை நேரடியாக சந்தித்து ஓட்டு கேட்க வேண்டும் என்பதற்காக வீடு, வீடாக நடந்து சென்று பிரசாரம் செய்வதாக, விளக்கம் அளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்.5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் பூத் சிலிப் வழங்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. வீடு வீடாக சென்று அங்கன்வாடி பணியாளர்கள் பூத் சிலிப்பை விநியோகம் செய்கின்றனர். இங்கு திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் சார்பில் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஈரோடு மாவட்ட நிா்வாகம் சாா்பில் குடியரசு தின விழா மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். காவலா்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலா்கள், பணியாளா்கள் என 100 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
நேற்று குடியரசு தினத்தை ஒட்டி தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத 90 நிறுவனங்கள் உரிமையாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என இது குறித்து நேற்று ஆய்வு செய்த தொழிலாளர் ஆணையர் ஜெயலட்சுமி கூறியுள்ளார். இவர்கள் நேற்று ஈரோடு பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் இந்த பகுதியில் உள்ள நிறுவனங்களில் ஆய்வு செய்து இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டமற்ற தொகுதி இடைத்தேர்தலில் 85 வயதுக்கும் மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தபால் வாக்கு அளிக்கும் பணி இன்று (ஜன.27) கடைசி நாள் ஆகும். கடந்த 23ம் தேதி தொடங்கிய இந்த வாக்குப்பதிவு 24, 25, 27ஆம் தேதி என 4 நாள்கள் நடைபெற்றது. இத்தொகுதிக்கு வரும் பிப்.5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக சார்பில் சந்திரசேகர், நாம் தமிழர் சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகின்றனர்.
ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட, ஈரோடு வருகை தந்தார் துறைவைகோ. அப்போது மதிமுக கட்சி அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகள் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பெரியாரும் வேண்டும் பெருமாளும் வேண்டும் என்று தான் சொல்வேன் என்ற துரைவைகோ, பெரியாரை இழிவுபடுத்தும் யாராக இருந்தாலும், ஈனப்பிறவி தான் என்றார்.
அம்மாபேட்டை அருகே உள்ள கோண மூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரோகிணி வயது 30. இவரது வீட்டில், பூட்டை திறந்து, வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த, அரை பவுன் தங்கம் மற்றும் கால் கொலுசு ஆகியவற்றை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இது குறித்து அம்மாபேட்டை போலீசில், ரோகிணி புகார் தெரிவித்தார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரகாஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோட்டைச் சேர்ந்த கௌதம்(27). இவரது மனைவி அசின்(19). இவர்களுக்கு 2 மாதம் முன் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் தடுப்பூசி செலுத்தும் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் குழந்தை மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. உடனே, மருத்துவமனையில் சேர்த்த நிலையில், குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தடுப்பூசியதால் குழந்தை இறந்ததாக போலீசாரிடம் புகார் அளித்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமிக்கு ஆதரவாக ஈரோடு காளை மாடு சிலை மற்றும் மரப்பாலம் பகுதிகளில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். இலவசங்கள் என்ற ஏமாற்று அறிவிப்புகளால் 60 ஆண்டுகளாக மயக்கத்தில் உள்ள மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நேற்று இரவு முதல் ஈரோடு ரயில் நிலையம், மற்றும் பேருந்து நிலையங்களில் பலத்த பாதுகாப்பு, தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையங்களில் விடிய விடிய பயணிகளின் உடைமைகளை கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அனுப்பப்படுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.