Dindigul

News February 26, 2026

திண்டுக்கல்: ரூ.54 லட்சம் கையாடல் செய்த கணவன் – மனைவி!

image

ஒட்டன்சத்திரத்தில் செல்வராஜ் என்பவர் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் கவியரசன் – தானிஷ்டோரா தம்பதியினர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் இருவரும் ரூ.54 லட்சத்தை கையாடல் செய்ததாகவும், அதை கேட்ட போது கவியரசன், தானிஷ்டோரா, கவியரசன் மாமனார் ஜேசுபாலன் ஆகிய மூவர் மிரட்டியதாக செல்வராஜ் மாவட்ட SP-யிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் கவியரசனை கைது செய்த போலீசார், மற்ற இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

News February 26, 2026

திண்டுக்கல்: ரூ.54 லட்சம் கையாடல் செய்த கணவன் – மனைவி!

image

ஒட்டன்சத்திரத்தில் செல்வராஜ் என்பவர் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் கவியரசன் – தானிஷ்டோரா தம்பதியினர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் இருவரும் ரூ.54 லட்சத்தை கையாடல் செய்ததாகவும், அதை கேட்ட போது கவியரசன், தானிஷ்டோரா, கவியரசன் மாமனார் ஜேசுபாலன் ஆகிய மூவர் மிரட்டியதாக செல்வராஜ் மாவட்ட SP-யிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் கவியரசனை கைது செய்த போலீசார், மற்ற இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

News February 25, 2026

திண்டுக்கல்: இனி உங்க Whatsapp-ல் ஆதார் கார்டு!

image

திண்டுக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 25, 2026

திண்டுக்கல்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

திண்டுக்கல் மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா.? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan<<>> என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்காம இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News February 25, 2026

திண்டுக்கல்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

திண்டுக்கல் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>’Tamil Nilam’<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News February 25, 2026

திண்டுக்கல்: Driving Licence வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <>க்ளிக் செய்து<<>> உங்க விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News February 25, 2026

திண்டுக்கல்: டிகிரி போதும்., ரூ.55,833 சம்பளத்தில் வங்கி வேலை

image

பெடரல் வங்கியில் காலியாக உள்ள Associate Officers (Sales) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 -27 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 4ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.38,666 – ரூ.55,833 வரை சம்பளம் வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்க.

News February 25, 2026

தாட்கோ மூலம் விமானப் பணியாளர் பயிற்சி: இளைஞர்களுக்கு அழைப்பு

image

திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் விமான முன்பதிவு ஆளுமை, கேபின் குழு பணியாளர் பயிற்சி வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் தெரிவித்தார். 18–35 வயது, பிளஸ்–2 தேர்ச்சி, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 3 மாத பயிற்சியுடன் தங்கும், உணவு வசதி வழங்கப்படும். விண்ணப்பிக்க www.tahdco.com இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

News February 25, 2026

திண்டுக்கல்: சிறுமி பாலியல் வன்கொடுமை; இளைஞருக்கு ஆயுள்

image

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியில் 2023-இல் சிறுமியை காதலிப்பதாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த அம்பாத்துரை சக்திவேல் (24) என்பவரை போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். தீவிர விசாரணைக்குப் பின் திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடத்தியது. 24.02.2026 அன்று நீதிபதி ஆயுள் தண்டனையுடன் கூடிய 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

News February 25, 2026

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 26.02.2026 காலை 10.30 மணிக்கு மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் வங்கி துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு மானியத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்க உள்ளனர். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!