India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று 17-10-2024 வானம் மேகங்களுடன் ஒரு சில இடங்களில் மழை பெய்கிறது. கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை நேற்று குறைந்தது. மீண்டும் இன்று காலை முதல் மழை தொடங்கியுள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட் விடுவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி மீன் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இதனால் அங்குள்ள கே ஆர் எஸ், கபினி ஆகிய அணிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து காவிரி உப நீர் திறந்துவிடப்பட்டது. ஒகேனக்கல்லில் இன்றைய (அக்-17) காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 18,000 கன அடியாக நீர்வரத்து உள்ளது.
ஐடிஐ மாணவர்களின் சேர்க்கை(24- 25) ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கையானது அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும். மாணவர் சேர்க்கை நாளை (18.10.2024) இறுதி வாய்ப்பாகும். முதற்கட்ட கலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெறாதவர்கள் மற்றும் விண்ணப்பிக்க தவறியவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி தெரிவித்துள்ளார். இதற்கு கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தகுதியானதாகும்.
தருமபுரியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எடுத்துள்ளது. மின் வினியோகம் சார்ந்த குறைபாடுகளை சரி செய்ய 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தொலைபேசி சேவை – மின்னகத்தை 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பூனையானூர் பகுதியைச் சார்ந்த மனோஜ்குமார். திருமணம் ஆகி மனைவி இறந்து விட்ட நிலையில், அதே பகுதியைச் சார்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவியைப் பின்தொடர்ந்து ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாகியுள்ளார். பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் பேரில், தலைமறைவான வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சில தினங்களாகவே தர்மபுரி மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இன்று காலை 8:30 மணி நிலவரப்படி. தர்மபுரி மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு. பாலக்கோட்டில் 39 மில்லி மீட்டர், அரூரில் 23.2 மி.மீ, மாரண்டஅல்லியில் 19 மி.மீ, பென்னாகரத்தில் 15.4 மி.மீ, பாப்பிரெட்டிப்பட்டியில் 15 மி.மீ, தர்மபுரியில் 12 மி.மீ, ஒகேனக்கல் மலைப்பகுதிகளில் 1.6மி.மீ, மழை பெய்துள்ளது .
தருமபுரி மாவட்ட நிர்வாகத்திற்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கூட்டரங்கில் இன்று 15.10.24 இல் மாவட்ட ஆட்சியர் கே. சாந்தி அவர்கள் வருகிற நவம்பர் 13 ஆம் தேதி இம் மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய குறை தீர்க்கும் நாள் நடைபெறும் இக்கூட்டத்திற்கு சென்னை ஓய்வூதிய இயக்குநர் முன்னிலை வகிக்க உள்ளார். பொதுமக்கள் மனுக்களை 30.10.24க்குள் சமர்பிக்க வேண்டும் என அறிவிப்பு
தருமபுரி மாவட்டம் தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட மாவட்ட வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் கோட்டாச்சியர் தலைமையில் வருகின்ற வெள்ளிக்கிழமை 18.10.24 இல் காலை 11 மணி அளவில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி நேற்று அறிவித்தார். தருமபுரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில் நீதி வழிகாட்டுதல் மையமத்தில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமையில் நடைபெறுகிறது. முகாமில் கலந்து கொள்பவர்கள் வருகின்ற (அக்-18) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நீதி விளையாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. விருப்பமானவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
2024-25 ஆம் ஆண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9,
11 ஆம் வகுப்பு மாணவர்கள் முறையே 8, 10 ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட (https://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும்bஅதிகாரமளித்தல் துறையின் இணையத்தளத்தின் (http://socialjustice.gov.in) அணுகி கல்வி உதவித்தொகை பயன்பெறலாம்
Sorry, no posts matched your criteria.