India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பென்னாகரம் பகுதி சேர்ந்த கிரிதரன் ஓட்டுநர் நேற்று முன்தினம் அப் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றபோது புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்ற போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து நேற்று பென்னாகரம் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 52). வி.சி.க. நிர்வாகி. இவர் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த பெண் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நேற்று ஞானசேகரனை கைது செய்தனர்
பாலக்கோடு அருகே கரகதஅள்ளி கிராமத்தில் அமைந்துள்ள சுங்க சாவடியை சுற்றுவட்டார பகுதிகளில் செல்லும் மக்களுக்கு அதிக வசூல் செய்வதாக தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் தாபா சிவா தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான தொண்டர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர். இதில் கலந்துகொண்ட அனைவரையும் போலீசார் கைது செய்து துண்டுகட்டாக சென்றனர்.
தருமபுரியில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 83 பணியிடங்கள். கணினி அறிவு, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.12,000 – ரூ.29,380, உதவி போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.10,000 – ரூ.24,470 வரை சம்பளம். நாளைக்குள் (மார்.3) இந்த <
தருமபுரி உழவர் சந்தையில் கடந்த 22ஆம் தேதி அன்று ஒரு கிலோ ரூ.18க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.8 க்கு விற்பனையானது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு உழவர் சந்தையில் இருந்து கோயம்பேடு, மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இதில், 15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி, ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனையானது.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே +1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தவெக நிர்வாகி போக்சோவில் கைது செய்யப்பட்டான். மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், கைதான சுதாகரன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். தவெக நகரப் பொறுப்பாளராக இருந்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.
தமிழக அரசின் மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுனர் (Pharmacist) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பார்மசி படிப்பில் டிப்ளமோ, இளங்கலை பட்டப்படிப்பு, Pharm. D முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். ரூ.35,400- ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் 10ஆம் தேதிக்குள் <
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர், மஞ்சப்பை விருதுகளை அறிவித்துள்ளார். இதில் தர்மபுரி மாவட்ட மக்கள் பங்கேற்க விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் (www.tnpcb.gov.in) செய்து கொள்ளலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார் .
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர், மஞ்சப்பை விருதுகளை அறிவித்துள்ளார். இதில் தர்மபுரி மாவட்ட மக்கள் பங்கேற்க விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் (www.tnpcb.gov.in) செய்து கொள்ளலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார் .
அரூர் அடுத்த பச்சனாம்பட்டியை சேர்ந்தவர் அருணாசலம் (54) இவரும், சுரேஷ், (37) என்பவரும் கடந்த பிப்.25ல், வேப்பம்பட்டியில் உள்ள விநாயகா ரைஸ்மில் அருகில் கட்டுவலை வைத்து கீரிப்பிள்ளையை பிடித்தனர். அங்கு வந்த தர்மபுரி வனப்பாதுகாப்பு படையினர் இருவரையும் பிடித்து, தீர்த்தமலை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவுப்படி, இருவரும் அரூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.