India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மூங்கப்பட்டி நெடுஞ்சாலையில், மொபட் மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஜிட்டன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி வைகுந்தன் (28) பலத்த காயமடைந்தார். இவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இந்த நிலையில் இவர் பலனின்றி உயிரிழந்தார். விபத்து தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி, தீர்த்தமலையில் அமைந்துள்ளது தீர்த்தகிரீஸ்வரர் ஆலயம். தீர்த்தங்களால் சூழப்பட்ட தீர்த்தமலை நோய் தீர்க்கும் தலமாக விளங்குகிறது. இங்குள்ள தீர்த்தத்தில் மூலிகைகள் கலந்து இருப்பதால், நீராடுபவர்கள் உடற்பிணி, உளப்பிணி யாவும் தீர்ந்து, புத்துணர்வும் புதுவாழ்வும் பெறுகின்றனர். மேலும் இக்கோயிலில் கடன் தொல்லை தீர வேண்டுவதுடன், குழந்தை வரம் வேண்டியும் வழிபடுகின்றனர். ஷேர் பண்ணுங்க!

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் படி மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை 2,84,091 நபர்கள் பயனடைந்துள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை திமுக மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சுந்தர் சந்தித்து புத்தகம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் திமுக மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தர்மபுரி மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்:
▶ தீயணைப்புத் துறை – 101
▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
▶ போக்குவரத்து காவலர் -103
▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091
▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072
▶ சாலை விபத்து அவசர சேவை – 1073
▶ பேரிடர் கால உதவி – 1077
▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930
▶ மின்சாரத்துறை – 1912. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” 5ம் கட்ட சுற்றுப்பயணம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி தருமபுரி மாவட்டத்தில் செப்டம்பர் 17-ம் தேதி தருமபுரி, அரூர், பாப்பிரெட்டிபட்டி பகுதிகளிலும், 18-ம் தேதி பாலக்கோடு, பென்னாகரம் பகுதிகளிளும் பரப்புரை செய்ய உள்ளார்.

மக்களின் பாதுகாப்பிற்காக காவலன் SOS செயலி உள்ளது. இந்த APPஐ பத்திரவிறக்கம் செய்து அவசர காலத்தில் மொபைலை அதிர செய்தால் நம் லொகேஷன் போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கும், APPல் EMERGENCY CONTACTல் பதிவு செய்த உறவினர்கள், நண்பர்களுக்கு சென்று விடும். அடுத்த சிலமணி நேரத்தில் போலீசார் லொகேஷனை டிராக் செய்து வந்து விடுவார்கள். இங்கு <

மேலும் மொபைல் டேட்டாவை ஆன் செய்து இந்த காவலன் SOS செயலியில் உள்ள SOSஐ கிளிக் செய்தால், மொபைலின் கேமரா தானாக திறந்து உங்களின் இருப்பிடத்தை புகைப்படம்/ வீடியோ எடுத்து கண்ட்ரோல் ரூமிற்கு அனுப்பும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தை தொடர்பு கொள்ளலாம் (04342-230000). ஷேர் பண்ணுங்க

தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காவலர் தினம் கொண்டாடப்பட்டது. இதில், பணியின் போது உயிரிழந்த தருமபுரி மாவட்ட போலீசார் நினைவாக வைக்கப்பட்டிருந்த நினைவுத் தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. S. மகேஸ்வரன் மற்றும் பிற உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், காவல்துறை வரலாற்றை விளக்கும் புகைப்படங்கள் மற்றும் துப்பாக்கி கண்காட்சியையும் தொடங்கி வைத்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26-ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையில் காலியாக உள்ள 1644 இடங்களை நிரப்பும் பொருட்டு, தகுதியுள்ள மாணவர்கள் சேர்ந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ. சதீஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். விபரங்களுக்கு அறிய 9894032730 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Sorry, no posts matched your criteria.