India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளை தடுக்க, இன்று பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில், தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக வள்ளலார் திடலில் நேற்று(ஏப்.) மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்று மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். சுமார் 50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் முன்னாள் படைவீரர்களை சிறப்புக் படைவீரர்களை சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னால் படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட விண்ணப்பம் அளிக்காதவர்கள், தங்களின் விண்ணப்பத்தினை மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் அளிக்க கலெக்டர் அறிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணிக்கு தருமபுரி நகர பகுதிகளில், பாமக கட்சி தலைவர் அன்புமணி மாம்பழம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தார். இதில் பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன், மற்றும் கட்சி நிறுவனர் ஏராளமான கலந்து கொண்டனர்.
பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் இன்று(ஏப்.3) தரும்புரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமகவின் தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அன்புமணி இன்று வாக்கு சேகரிக்க உள்ளார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் மாதையன்(60). நேற்று(ஏப்.1) இவர் பெரியபள்ளம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒற்றை யானை திடீரென தாக்கியதில், அங்கேயே படுகாயம் அடைந்து மாதையன் உயிரிழந்துள்ளார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த ஒகேனக்கல் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரியில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயில் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனவே பொதுமக்கள் பகல் வேளைகளில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணி சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி நேற்று இண்டூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். இதில் தருமபுரி கிழக்கு மாவட்டம் கழக செயலாளர் தடங்கம், சுப்பிரமணி, நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் வைகுந்தம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன்,கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவாகும் வாக்கு பெட்டி இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் குரும்பட்டி அடுத்த செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தை ஏப்ரல் 1 ஆம் தேதி தர்மபுரி மாவட்ட தேர்தல் அதிகாரியும் ,மாவட்ட ஆட்சியருமான சாந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.
தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தையில் திமுக வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளர் மணியை ஆதரித்து உழவர் சந்தையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Sorry, no posts matched your criteria.