India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் சுரேஷ் (44). மீனவரான இவர் இன்று கடலில் பிடித்து வந்த மீனை, அதே பகுதியை சேர்ந்த ஸ்டாலின்(50) என்பவர் 500 ரூபாய்க்கு கேட்டுள்ளார். அதற்கு சுரேஷ் மீன் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. உடனே ஸ்டாலின் தனது உறவினர்களுடன் சேர்ந்து சுரேசை தாக்கினார். இதுகுறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து ஸ்டாலினை கைது செய்தனர்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்திலிருந்து நீர் வெளியேற்றுவதற்கான வடிகால் அமைப்புகள் குறித்தும் மற்றும் மழை பொழிவிற்கு ஏற்ப தகுந்த முறையில் நீர் வெளியேற்றுவது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அவர்கள் தலைமையில் என்.எல்.சி நிர்வாகிகளுடன் இன்று (12.10.2024) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது . இதில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி எஸ்.ஐ. சிவராமன் மற்றும் போலீசார் கிளிமங்கலம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மணிவாசகம் (55) என்பவரை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 26 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லிக்குப்பம் ரஹ்மான் நகரைச் சேர்ந்த பாபு என்பவர் குடும்பத்தினருடன் திருப்பதி சென்ற நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து 2லட்சம் மதிப்புள்ள நகைகள் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் பெரிய சோழ வள்ளி சேர்ந்த குப்புசாமி மகன் சிற்றரசு(22) ,சரவணன் மகன் நித்திஷ் (19)ஆகியோரை நேற்று போலிசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சின்ன வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளதை கடலூர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (11.10.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாநகராட்சி ஆணையாளர் அனு மற்றும் பலர் உடன் இருந்தனர்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சின்ன வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளதை கடலூர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (11.10.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாநகராட்சி ஆணையாளர் அனு மற்றும் பலர் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் உள்ள விற்பனையாளருக்கான (Salesman) 152 பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. இப்பணிக்கு www.drbmyt.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் நவ.7ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யவும்.
தாம்பரத்தில் இருந்து தஞ்சாவூர் வரை முன்பதிவில்லா சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரத்தில் இந்த சிறப்பு மெமு ரயில் (06007) நாளை அதிகாலை 12.15 புறப்பட்டு தஞ்சாவூருக்கு காலை 6.50 சென்றடையும். இந்த ரயில் செங்கல்பட்டு, பண்ருட்டி, கடலூர் துறைமுகம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம் வழியாக தஞ்சாவூர் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடலூர் வள்ளலார் மையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தில் கட்டுமானம் பணிகள் மேற்கொள்ள அரசுக்கு அனுமதி. வள்ளலார் கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தை கட்டுமான பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை எனவும், மேலும் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மேற்கொள்ளக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பண்ருட்டி லட்சுமி நாராயணபுரத்தை சேர்ந்தவர் தொழிலாளி ஏழுமலை (52). இவர் இன்று இரவு 7.30 மணியளவில் அதே பகுதியில் உள்ள சென்னை மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பண்ருட்டி நோக்கி வந்த அரசு பஸ் அவர் மீது மோதியதில் உடல் நசுங்கிய ஏழுமலை அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.