Cuddalore

News August 28, 2024

கடலூரில் நாளை மின்தடை

image

கடலூர் பல்வேறு மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (29-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஊமங்கலம், மேலப்பாளையூர், ஸ்ரீமுஷ்ணம், செம்மங்குப்பம், குணமங்கலம், கீழ்ப்பலையுர், ஆலப்பாக்கம், சி.கீரனுர், இருப்புக்குறிச்சி, சமூட்டிகுப்பம், அம்மேரி, சிப்காட் பகுதி, அரசக்குழி, பொன்னாலகரம், கோபாலபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.

News August 27, 2024

விவசாயிகளுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 30ஆம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. இதற்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் மனுக்கள் பெற உள்ளார். இதில் தங்களது கோரிக்கை குறித்து பேச உள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணி முதல் 10 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News August 27, 2024

கடலூர் அருகே மீன் முள் குத்தி 6 பேர் படுகாயம்

image

கடலூர் அருகே சாமியார் பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர்கள் நேற்று கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திருக்கை வகை மீன் முள் குத்தியதில் தமிழ் வேந்தன், அரவிந்தன், காயத்ரி, வசந்தா, அப்பு, சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 27, 2024

கடலூர் மாநகராட்சி மேயர் கேள்வி

image

கடலூர் மாநகராட்சியில் குப்பை அள்ளும் வாகனங்களை மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று காலை மாநகர மேயர் சுந்தரி ராஜா மாநகர ஆணையாளர் அனு ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது மாநகரா மேயர் வீடு தோறும் சென்று குப்பை பெறுவதற்கு மாநகராட்சி சார்பாக 130 மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 60 சைக்கிள் தான் பயன்பாட்டில் உள்ளது. மீதி சைக்கிள் எங்கே என்று கேள்வி எழுப்பினார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News August 27, 2024

கடலூர் ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

image

கடலூர் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘கடலூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து நெல் விற்பனை செய்ய இ.டி.பி.சி இணையத்தில் வரும் கே.எம்.எஸ் 24-25 கொள்முதல் பருவம், செப்.1 ஆம் தேதி முதல் துவங்குகிறது. இதில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் விவசாயிகள் தொடர்புடைய கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்து கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 27, 2024

மேம்பாலம் கட்டும் பணிகள்: கலெக்டர் ஆய்வு

image

கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா மேம்பாலம் அருகே கெடிலம் ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் நேற்று (ஆக.26) மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் கடலூர் மாநகராட்சி ஆணையாளர் எஸ்.அனு மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News August 26, 2024

தேமுதிக நிர்வாகிக்கு விஜய பிரபாகரன் அஞ்சலி

image

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, பண்ருட்டியில் உள்ள நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகி வெங்கடேசன் நேற்று கட்சிக் கொடிக்கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்நிலையில், அவரது உடலுக்கு நேரில் சென்று விஜய பிரபாகரன் இன்று அஞ்சலி செலுத்தினர். அப்போது வெங்கடேசனின் 2 மகன்களின் கல்விச் செலவைத் தேமுதிக ஏற்கும் என விஜய பிரபாகரன் கூறினார்.

News August 26, 2024

புவனகிரி எம்எல்ஏ அண்ணாமலைக்கு கண்டனம்

image

புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் தனது வலைத்தள பக்கத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசிய அண்ணாமலைக்கு தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார். மேலும் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசும் “புளுகு மூட்டை” அண்ணாமலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News August 26, 2024

கடலூர் கலெக்டர் பார்வை

image

கடலுாரில் புதிய பஸ் நிலையத்தை எம்.புதுாருக்கு பதிலாக பாதிரிக்குப்பத்தில் அமைக்க முடியுமா என கலெக்டர் பார்வையிட்டார். புதிய பேருந்து நிலையம் எம்.புதூரில் அமைக்க தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வருவதால் வேறு இடத்தில் அமைக்க முடியுமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது, அதையொட்டி பாதிரிக்குப்பத்தில் உள்ள பெருமாள் கோவில் இடத்தை கலெக்டர் தலைமையில், வருவாய் அலுவலர், தாசில்தார் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News August 26, 2024

அழகியநத்தம்: வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு

image

கடலூர் மாவட்டம் மற்றும் வட்டம், அழகியநத்தம் இரண்டாயிரம் விளாகம் பகுதிகளில் தென்பெண்ணையாற்றில் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (25.08.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு அதிகாரிகள் உட்பட பலர் இருந்தனர்.

error: Content is protected !!