India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ம் நகராட்சியில் செயல்படுத்தப்படும் பல்வேறு பணிகள் குறித்து செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் சரவணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது விருதாச்சலம் நகர் மன்ற தலைவர் அன்புமணி முருகதாஸ் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரை சந்தித்தார். சந்திப்பின் போது நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர் உடனிருந்தனர்.
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இன்று மணிலா வரத்து 120 மூட்டை, நெல் வரத்து 3100 மூட்டை, எள் வரத்து 140 மூட்டை, உளுந்து வரத்து 25 மூட்டை, கம்பு வரத்து 20 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 20 மூட்டை, தேங்காய் பருப்பு 10, தட்டை பயிர் 1 மூட்டை என மொத்தம் 3436 வந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 20224 ஆம் ஆண்டிற்கான 1330 திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெறவுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் இதில் பங்கு பெறலாம், மேலும் கடலூர் ஆட்சியரகத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் தங்கள் விண்ணப்பங்களை அளிக்கலாம். மேலும் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அஞ்சல் தலை சேகரிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற மாணவர்கள் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு மாணவராக இருக்க வேண்டும். அஞ்சல்தலை தொடர்பான எழுத்து வினாடிவினா வருகின்ற செப்.28ஆம் தேதி நடத்தப்படும். இதற்கு விண்ணப்ப http://tamilnadupost.cept.gov என்ற முகவரியில் பதிவு செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்ட இயக்குனர் அருண் தம்புராஜ் சந்தித்து அவர்களிடம் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவசர சிகிச்சை பிரிவு, மருத்துவமனை வளாகம் என மருத்துவமனை முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் காவலாளியாக பணிபுரிந்து வரும், வில்வநகரைச் சேர்ந்த ஆர்த்தி (38) என்பவர் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குறிஞ்சிப்பாடி அடுத்து ஆடுர் மேலபுதுப்பேட்டையைச் சேர்ந்த தங்கமணி என்பவரை பிரசவ வார்டுக்குள் செல்ல விடாமல் தடுத்ததால், அவர் ஆர்த்தியை சரமாரியாக தாக்கினார். இதுகுறித்து புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து தங்கமணியை கைது செய்தனர்.
வடலூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் முருகன் (50). இவர் கைரேகை ஜோசியம் பார்ப்பவர். இவரை இரவு 8 மணி அளவில் வீட்டின் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் (26) மது போதையில் ஜோதிடர் முருகனை ஆபாசமாக திட்டி, தலையில் வெட்டியதால் படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து வடலூர் போலீஸ் வழக்கு பதிவு செய்து ஸ்டீபன்ராஜை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தவேண்டும். மேலும் விநாயகர் சிலைகளை கடலூர் உப்பனாறு, தேவனாம்பட்டினம் கடற்கரை, கொள்ளிடம் ஆறு மற்றும் வெள்ளாறு ஆகிய இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் நேற்று அறிவித்தார்.
கடலூரில் புதிய பஸ் நிலையத்தை அதிமுக ஆட்சியில் கலெக்டர் அலுவலகம் அருகில் கட்ட இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாறியதும் எம்.புதூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், தற்போது பாதிரிக்குப்பத்தில் பஸ் நிலையத்தை மாற்றி அமைக்கலாமா என அங்குள்ள கோவில் இடத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். இதனால் பஸ் நிலையம் எங்கே அமைய போகிறது என மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயசங்கா் மனைவி வேம்பு (34). வேம்புக்கும், சிவாவுக்கும் (30) தவறான உறவு இருந்துள்ளது. சிவா வீட்டில் வேம்பு இறந்து கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சிவாவிடம் விசாரணை செய்ததில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற தகராறில் அவரை அடித்து கொன்றதாக தெரியவந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.