Cuddalore

News March 18, 2026

கடலூர்: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன் உதவி

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News March 18, 2026

கடலூர்: குறை தீர்க்கும் குழு அமைப்பு அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் சோதனையில், கையகப்படுத்தப்படும் பணம் உள்ளிட்ட பொருட்களை விடுவிப்பதற்கு, மாவட்ட குறைதீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது என
மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரை எண் 223 செயல்படும் என்றும், 8300697292 கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News March 18, 2026

கடலூர்: வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை!

image

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாகியும், தொடர்ந்து பதிவை புதுப்பித்து வரும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்கும் இளைஞர்கள் கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். இதில், 3 ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படும். இதனை அனைவருக்கும் SHARE செய்யவும்.!

News March 18, 2026

கடலூர்: ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு!

image

தெற்கு மத்திய இரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சி இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2801
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: 10th, ITI
5. கடைசி தேதி: 11.04.2026
6. மேலும் அறிய: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 18, 2026

கடலூர் மாவட்ட வாக்காளர்கள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் முதல் முறை வாக்காளர்கள் 48,932 பேர் உள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 13 ஆயிரத்து 125 பேரும், 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 25 பேரும் வாக்காளர் பட்டியலில் உள்ளனர். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 20,379 பேர் உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

News March 18, 2026

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

image

மாற்றுத்திறனாளிகளுக்கு Saksham மொபைல் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பில் எளிதாக பங்கேற்க உதவுவதற்காக இந்த செயலியை மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்குச்சாவடி விவரங்களை அறியலாம், போக்குவரத்து வசதி கோரலாம், சக்கர நாற்காலிகள் போன்ற உதவிகளை முன்பதி செய்யலாம், தேர்தல் நாளில் தேவையான உதவிகளை முன்கூட்டியே பெற இந்த செயலி உதவும் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

News March 18, 2026

கடலூர்: 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை – சோகம்

image

சிதம்பரம் அடுத்த மீதிக்குடியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகள் லாவண்யா(17). 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி வந்த லாவண்யா சரியாக தேர்வு எழுதாததால் மன வேதனையில் விஷத்தை குடித்துள்ளார். பின்னர் சென்னை ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாவண்யா, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல!

News March 18, 2026

கடலூர்: விருந்து அளித்தால் கடும் நடவடிக்கை – ஆட்சியர்

image

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் விருந்து அளித்தால் கடும் நடவடிக்கை என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதில், குறிப்பாக கல்யாண மண்டபங்களில் திருமணங்கள், வளைகாப்பு, பிறந்தநாள் விழாக்கள், காது குத்து நிகழ்ச்சிகள் என்ற பெயரில் திருமண மண்டபங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு, போலியான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து பணம் வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

News March 18, 2026

கடலூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News March 18, 2026

கடலூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!