India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் 19.10.2024 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், மற்றும் திருமுட்டம் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் வட்ட வழங்கல் பிரிவில் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இன்று (17.10.2024) துறைச் சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சார் ஆட்சியர் ரஷ்மி ராணி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழையால் ஆரஞ்சு அலாட் விடுபட்டது. இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்திருந்தது. புயல் ஆந்திரா நோக்கியே சென்றதால், மாவட்டத்தில் மழை குறைந்ததால், இன்று இரண்டு நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை புரிகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் இன்று (16/10/2024) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், சிதம்பரம் காவல் ஆய்வாளர் அமுதா, விருத்தாசலம் உதவி ஆய்வாளர் அமிர்தலிங்கம், நெய்வேலி உதவி ஆய்வாளர் உலகநாதன், சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் பொன்மகரம் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், பண்ருட்டி, காராமணிக்குப்பம், நெல்லிக்குப்பம், புவனகிரி உட்பட பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் நேற்று 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பெண்ணாடம் அடுத்த எடையூரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மனைவி சுமதி(37). இவர் தனது பசுமாட்டை இன்று வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் கட்டி இருந்தார். அப்போது கன மழை காரணமாக கொட்டகையில் இருந்த மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. அதனை பசு மாடு மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பசு மாடு உயிரிழந்தது. இது குறித்து பெண்ணாடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும், கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை (16.10.2024) விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும், கல்லூரிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அனேகப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த ஆரஞ்சு அலர்ட் கடலோரப் பகுதியில் உள்ள மக்கள்,தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆதிவராக நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவர் இரு தினங்களுக்கு முன்பு டெம்போ வேன் வீட்டில் அருகே நிறுத்தியிருந்தார். அப்போது அதே பகுதி சேர்ந்த பாக்கியராஜ் சேகர் ஆகியோர் இருவரும் ஏன் வண்டியை எங்கள் வீட்டில் முன்பு நிறுத்தாத என்று கேட்டு அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து நேற்று ராஜேந்திரன் போலீசாரிடம் புகார் அளித்தார்.
Sorry, no posts matched your criteria.