Cuddalore

News July 9, 2025

கடலூர்: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு வேலை !

image

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இதற்கு B.E / ஐடிஐ / டிப்ளமோ முடித்தவர்கள் வரும் ஜூலை.12-க்குள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு சிதம்பரத்தில் வரும் ஜூலை.31 அன்று நடைபெற உள்ளது. இந்த தகவலை உங்க நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News July 9, 2025

கடலூர்: ரயில்வே கேட் கீப்பருக்கு சிறை

image

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் நேற்று (ஜூலை 08) காலை தண்டவாளத்தை கடந்த பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரயில் மோதி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் செம்மங்குப்பம் ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை நேற்று கைது செய்த போலீசார், அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிதம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News July 9, 2025

கடலூர்: விபத்தில் பறிபோன 3 உயிர்கள்

image

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் நேற்று (ஜூலை 8) செவ்வாய்க்கிழமை நான் எங்க போட்டோ காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாணவி சாருமதி, மாணவர்கள் செழியன் (15) மற்றும் நிமலேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்தவர்கள் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News July 8, 2025

கடலூர் விபத்து: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு

image

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். ரயில் விபத்தில் உயிரிழந்த சுப்ரமணியபுரம் பகுதியைச் சார்ந்த திராவிடமணி என்பவரது மகள் சாருமதி மற்றும் அவரது மகன் செழியன் ஆகியோரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கண்ணீர் மல்க கலந்து கொண்டனர்.

News July 8, 2025

கடலூர்: வேலை வேண்டுமா? இந்த கோயிலுக்கு போங்க

image

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள நகராமலை கிராமத்தில் அகஸ்திய மகரிஷி பூஜை செய்த, சிறப்பு வாய்ந்த கோயிலாக கருதப்படும் அகஸ்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரதோஷ தினத்தில் பிரார்த்தனை செய்தால் தங்களது மனதுக்கு பிடித்த வேலை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு பகிரவும்.

News July 8, 2025

கடலூர்: 3 ரயில்கள் பகுதியளவு ரத்து – தெற்கு ரயில்வே

image

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் விபத்து நடந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் முடிவடையாததால் 3 ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மைசூர் – கடலூர் போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் புதுச்சத்திரம் வரையும், தாம்பரம் – திருச்சி ரயில் சிதம்பரம் வரையும், திருவாரூர் மயிலாடுதுறை பயணிகள் ரயில் ஆலப்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News July 8, 2025

ரயில் தடங்களில் இன்டர் லாக்கிங் சிஸ்டம் – ரயில்வே பொதுமேலாளர்

image

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்டர் லாக்கிங் இல்லாததால் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மாணவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ரயில் தடங்களிலும் இன்டர் லாக்கிங் சிஸ்டம் பொறுத்தப்படும் என விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த பின்னர் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் உறுதியளித்துள்ளார்.

News July 8, 2025

விபத்து தொடர்பாக மன்னிப்பு கோரிய ரயில்வே நிர்வாகம்

image

கடலூர், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் விபத்து தொடர்பாக ரயில்வே நிர்வாகம் தற்போது மன்னிப்பு கோரியுள்ளது.

News July 8, 2025

கடலூர் ஆட்சியர் மீது தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு

image

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் பகுதியில் இன்று (ஜூலை.8) காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ‘செம்மங்குப்பத்தில் சுரங்கப்பாதை அமைக்க கடந்த ஒரு வருடமாக ஆட்சியர் அனுமதி வழங்கவில்லை’ என தெற்கு ரயில்வே நிர்வாகம் பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

News July 8, 2025

கடலூர் ரயில் விபத்து: ரயில்வே சார்பில் நிவாரணம்

image

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் ரயில் விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த குழந்தைகளுக்கு நிவாரணமாக தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயம் அடைந்த மாணவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

error: Content is protected !!