Cuddalore

News September 7, 2024

கடலூர்: 3000 புதிய ரேஷன் கார்டுகள் வழங்க ஏற்பாடுகள் தீவிரம்

image

கடலூர் மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு முதல் கட்டமாக 3000 கார்டுகள் விரைவில் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 8000 கார்டுகள் தகுதியானவை என கண்டறியப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 3000 கார்டுகள் பிரிண்டிங் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

News September 7, 2024

கடலூர் சிறைக்குள் மது பாட்டில்களை வீசிய மர்ம நபர்கள்

image

கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. நேற்று நள்ளிரவு நேரத்தில் இந்த சிறையின் பின்பக்க சுவர் அருகில் இருக்கும் சாலையில் இருந்து மர்மநபர்கள் யாரோ சிலர் பிளாஸ்டிக் டப்பாவில் உள்ள 15 மதுபாட்டில்களை சிறை வளாகத்திற்குள் வீசி சென்றனர். இதை பார்த்த சிறை காவலர்கள் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அதனை வீசிச்சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 7, 2024

கடலூர் கலெக்டர் எச்சரிக்கை

image

கடலூா் மாவட்டத்தில் முறைப்படுத்திக் கொள்ளப்படாத வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் எச்சரித்துள்ளாா். அவா் வெளியிட்ட குறிப்பில், கடலூாரில் உள்ள கிராம ஊராட்சிகளிலும் 2.10.2023 முதல் மனைப்பிரிவு அனுமதி மற்றும் கட்டட வரைபட அனுமதி இணையதளம் மூலம் மட்டுமே பெறப்பட வேண்டும். மேலும், 2,500 சதுரடி கட்ட இணையவழியில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

News September 7, 2024

கடலூர் சிறைக்குள் மது பாட்டில்களை வீசிய மர்ம நபர்கள்

image

கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. நேற்று நள்ளிரவு நேரத்தில் இந்த சிறையின் பின்பக்க சுவர் அருகில் இருக்கும் சாலையில் இருந்து மர்மநபர்கள் யாரோ சிலர் பிளாஸ்டிக் டப்பாவில் உள்ள 15 மதுபாட்டில்களை சிறை வளாகத்திற்குள் வீசி சென்றனர். இதை பார்த்த சிறை காவலர்கள் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அதனை வீசிச்சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 7, 2024

கடலூர் சிறைக்குள் மது பாட்டில்களை வீசிய மர்ம நபர்கள்

image

கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. நேற்று நள்ளிரவு நேரத்தில் இந்த சிறையின் பின்பக்க சுவர் அருகில் இருக்கும் சாலையில் இருந்து மர்மநபர்கள் யாரோ சிலர் பிளாஸ்டிக் டப்பாவில் உள்ள 15 மதுபாட்டில்களை சிறை வளாகத்திற்குள் வீசி சென்றனர். இதை பார்த்த சிறை காவலர்கள் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அதனை வீசிச்சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 7, 2024

கடலூர் மாவட்டத்தில் 14ஆம் தேதி லோக் அதாலத்

image

கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வரும் 14ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடக்கிறது. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சிவில், குடும்ப, தொழிலாளர் நல வழக்குகள், குற்றவியல் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, ஒரே நாளில் தீர்வு காணப்படுகிறது. இதனால் வழக்குகளால் ஏற்படும் கால, பண விரயங்கள் தவிர்க்கப்பட்டு உடனடி தீர்வு காணப்படும்.

News September 6, 2024

கடலூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் காவல்துறை சார்பில் ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று கடலூர் மாவட்டத்தில் அனைத்து உதவி காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 6, 2024

திருப்பாதிரிப்புலியூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு

image

விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு இன்று, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இதில் முல் அரும்பு 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சாமந்திப்பூ 400 ரூபாயும், பன்னீர் ரோஸ் 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் ஏராளமான பொதுமக்கள் பூக்களை வாங்கிச் சென்றனர்.

News September 6, 2024

கடலூர் மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 12.9.2024 அன்று கடலூரில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நேரிலோ அல்லது tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் வருகிற 11-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News September 5, 2024

கடலூர் மாவட்டத்தில் ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (05/09/2024) கடலூர் உதவி ஆய்வாளர் உத்திரம்மாள், சிதம்பரம் காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு, விருத்தாசலம் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் பிருந்தா, சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் ரேவதி ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!