Cuddalore

News September 28, 2025

சிதம்பரம் எம்.பி திருமாவளவன் இரங்கல்

image

‘தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் கரூர் பரப்புரை பயணத்தில் நடந்த கொடுந்துயரம் நெஞ்சைப் பதற வைக்கிறது. கடும் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்! உயிருக்குப் போராடுவோரைக் காப்பாற்றிட அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.

News September 28, 2025

கடலூர்: 12th போதும்; மத்திய அரசு வேலை ரெடி

image

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 7565 Constable (Executive) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. காலியிடங்கள் : 7565
3. கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு
4. வயது: 18-25 (SC/ST-30, OBC-28)
5. கடைசி நாள் : 21.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>. இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News September 28, 2025

கடலூர் அருகே 21 பேர் மீது வழக்கு

image

கடலூர் அருகே சாத்தங்குப்பத்தில் நேற்று காலை பழைய நிழற்குடை இடிக்கப்பட்ட இடத்தில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News September 28, 2025

கடலூர்: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க

News September 28, 2025

கடலூர் அருகே வியாபாரி வீட்டில் குண்டு வீச்சு

image

பண்ருட்டி அருகே மாளிகம்பட்டை சேர்ந்தவர் முந்திரி வியாபாரி குருசாமி. இவரது 16 வயது மகனுக்கும், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்த விரோதம் காரணமாக கல்லூரி மாணவர் 16 வயது சிறுவர்கள் 2 பேருடன் சேர்ந்து குருசாமி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து கல்லூரி மாணவரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

News September 28, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையால் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்காக திருக்குறள் முற்றோதல் போட்டி நடத்தப்படுகிறது. இதற்கு பரிசு பெற 1330 திருக்குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். இதில் பங்குபெற விருப்பம் உள்ளவர்கள் <>tamilvalarchithurai.tn.gov.in <<>>என்ற இணையவழி மூலம் 30.10.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 28, 2025

கடலூர்: ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற சமூக நல அலுவலர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற, கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக, கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா பாராட்டு சான்றிதழ் பெற்றார். இதையடுத்து அவர் கடலூரில் இன்று (செப்.,27) மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

News September 27, 2025

கடலூர்: இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இன்று (செப்.27) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 27, 2025

கோப்பையை வென்ற வீரர்களுக்கு எஸ்பி பாராட்டு

image

கடலூர் காவல்துறை அணிகள் கபடி போட்டியில் சிறப்பான சாதனை புரிந்துள்ளன. தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான அரசு ஊழியர்கள் பிரிவு கபடி விளையாட்டுப் போட்டியில், கடலூர் காவல் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் அணி இரண்டாம் இடமும், பெண்கள் அணி முதலிடமும் பெற்று முதலமைச்சர் கோப்பையை வென்றனர். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கடலூர் எஸ்பி ஜெயக்குமார் வாழ்த்து தெரிவித்தார்.

News September 27, 2025

கடலூர்: ரூ.69,100 சம்பளத்தில்..மத்திய அரசு வேலை

image

கடலூர் மக்களே..! மத்திய அரசின் உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1.துறை: உளவுத்துறை
2.பணி: Security Assistant (Motor Transport)
3.கல்வி தகுதி: 10-ம் வகுப்பு & LMV ஓட்டுநர் உரிமம்
4.சம்பளம்: ரூ.21,700 –ரூ.69,100
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>Click <<>>Here
6.கடைசி தேதி: 28.09.2025
7. இதற்கான தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது.
அரசு வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!