Cuddalore

News April 9, 2026

கடலூர் மாவட்டத்தில் இயல்பை விட அதிக மழை பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் இன்று ஏப்ரல் 9ஆம் தேதி வரை இயல்பாக 22.7 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 44.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் மழை இயல்பை விட 95 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 9, 2026

கடலூர்: தபால் வாக்களிக்க ஏற்பாடு – ஆட்சியர் தகவல்

image

சட்டமன்ற பொதுத்தேர்தலில் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் பணியாளர்கள் ஏப்ரல் 13, 14, 15 ஆம் தேதி ஆகிய 3 நாட்களில் தபால் வாக்கினை செலுத்தலாம். இதற்கு அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

News April 9, 2026

கடலூர் மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

கடலூர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 9, 2026

கடலூர் மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

கடலூர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 9, 2026

கடலூரில் தவெக விஜய் பிரச்சார தேதி மாற்றம்

image

கடலூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து தவெக தலைவர் விஜய் மஞ்சக்குப்பம் மைதானத்தில் (ஏப்.9) இன்று பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்தார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், திடீரென பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, வருகின்ற 11-ம் தேதி கடலூரில் பிரச்சாரம் நடைபெறும் என்று தமிழக வெற்றி கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 9, 2026

கடலூர்: மாதம் ரூ.4,000 வேண்டுமா? APPLY NOW!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News April 9, 2026

கடலூர்: மாதம் ரூ.4,000 வேண்டுமா? APPLY NOW!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News April 9, 2026

கடலூர்: இன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு..!

image

புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டி புதுவை எல்லையில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் இயங்கும் தமிழக பகுதி டாஸ்மாக் கடைகளை இன்று காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை மூட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிடுள்ளார். மேலும், தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான அடுத்த மாதம் மே 4-ந்தேதி அன்றும் மதுபான விற்பனையை நிறுத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News April 9, 2026

கடலூர்: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி..!

image

பண்ருட்டி அருகே உள்ள மருங்கூரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கருணாநிதி (55). இவர் மானடிக்குப்பத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவரது வீட்டில் இருந்த புளியமரத்தில் ஏறி, புளி உளுக்கிக் கொண்டிருந்தார். அப்போது மரத்தின் கிளை எதிர்பாராத விதமாக அருகில் சென்ற மின்கம்பியின் மீது உரசியதில் மின்சாரம் தாக்கி கருணாநிதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

News April 8, 2026

கடலூர்: விஜய் பிரச்சாரம் ரத்து

image

கடலூர் மஞ்சைநகர் மைதானத்தில் தவெக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். அதனை முன்னிட்டு காவல்துறையினர் நிபந்தனைகளை விதித்துள்ளனர். அதில், காலை 10 மணிக்கு தொடங்குய பிரச்சாரத்தை 1 மணிக்குள்ளாக முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது திடீரென பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.

error: Content is protected !!