India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பண்ருட்டி, கோ.பூவனூர், விருதை, விஜயமாநகரம், வேப்பூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.30) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, வேப்பூர், அடரி, கீழூர், மங்களூர், சேப்பாக்கம், கீழக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் அடுத்த கலையூரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் மகள் பிரதிக்ஷா (5). இன்று தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த பதிவெண் இல்லாத டிராக்டர் பிரதிக்ஷா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவளை பாகூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தாள். இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2025ஆம் ஆண்டு ஜனவரி மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 31.01.2025 நாளன்று புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற உள்ளார். அதனால் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 7 லட்சத்து 89 ஆயிரத்து 509 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 994 பேர் உள்நோயாளிகளாக தங்கியிருந்து சிகிச்சை பெற்றனர். இதன் மூலம் கடந்த ஆண்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2,632 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என மருத்துவத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடலுார் மாவட்டத்தில, கடந்த ஓராண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் விபத்தில் காயமடைந்த 17,626 பேர் உட்பட 85,939 பேர் பயனடைந்துள்ளனர். இதில் பிரசவம், சாலை விபத்துகள், நெஞ்சுவலி, சுவாச கோளாறு உள்ளிட்ட அவசர மருத்துவ உதவிக்காக பலர் பயனடைந்துள்ளனர். சிறப்பு சேவையாக விஷம் குடித்தல், நாய் மற்றும் பாம்பு கடி ஆகிய அவசரங்களிலும் சேவை வழங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டைவிட கூடுதலாக 846 பேர் பயன்பெற்றனர்.
குறிஞ்சிப்பாடி அடுத்த சின்ன தானங்குப்பத்தை சேர்ந்தவர் தொழிலாளி வெங்கடேசன் (43). இவர் அதே பகுதியை சேர்ந்த சாரதிக்கு சொந்தமான தேக்கு மரத்தில் ஏறி கிளைகளை அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் – காட்டுமன்னார்கோயில் சாலையில் ஓட்டுநரின் கவனக்குறைவால்
நெய்வாசல் கிராமம் அருகே
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிதம்பரம் ரயிலடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இன்று 76 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.இதில் சிறப்பு விருந்தினராக நா.த.க. நிர்வாகியும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளருமான மணிவாசகம் என்பவர் தேசிய கொடியை ஏற்றி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றுகளை வழங்கியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் தேரடி தெருவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் ஆளுநர் ஆ.என் ரவி, இன்று சிதம்பரத்தில் நடைபெறும் அவரது பிறந்தநாள் விழா கூட்டத்திற்கு வருகை தருவதை அனைத்துக் கட்சிகள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். கருப்புக் கொடி காட்டப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நல்லாத்தூர், தொழுதூர், ஒரையூர், வெள்ளக்கரை உள்ளிட்ட பிற துணை மின் நிலையங்களில் நாளை (ஐன..28) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால, நல்லாத்தூர், கீழ்குமாரமங்கலம், புதுக்கடை, தூக்கணாம்பாக்கம், செல்லஞ்சேரி உள்ளிட்ட பிற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.