Cuddalore

News April 15, 2025

கடலூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் லாரி மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டி செல்லும் சமயத்தில் ஓய்வு எடுக்கும் சூழ்நிலை வரும் பட்சத்தில் நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடம், சுங்கச்சாவடி மற்றும் காவல் நிலையம் அருகில் நிறுத்தி ஓய்வு எடுக்க வேண்டும் என கடலூர் மாவட்ட காவல் துறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 14, 2025

கடலூர்: மாதம் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

image

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அலுவலக உதவியாளருக்கான (Office Assistant) 5 பணியிடங்கள் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வாயிலாக நிரப்பப்பட உள்ளன. இதற்கு மாத சம்பளமாக ரூ.15,000 வழங்கப்பட உள்ளது. குறைந்தது 12-ஆம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட நபர்கள் tnprivatejobs.tn.gov எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். உங்க நண்பருக்கு இதனை SHARE செய்யவும்.

News April 14, 2025

கடலூர்: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்!

image

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 1800 425 5901 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.

News April 14, 2025

தமிழ் புத்தாண்டில் பஞ்சாங்கம் வாசிக்கும் சிறப்பு கோயில்

image

சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயமான நடராஜர் ஆலயத்தில் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து சிறப்பு நிகழ்வாக இந்த ஆண்டுக்கான பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று சிதம்பரம் நடராஜரை தரிசிப்பது மிக சிறப்பாகும்.

News April 14, 2025

கடலூர் பாடலீஸ்வரர் கோயில்!

image

கடலூரில் புகழ்பெற்ற பாடலீஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் சிவனை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.

News April 14, 2025

இரவு ரோந்து செல்லும் அதிகாரிகளின் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (13/04/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.

News April 13, 2025

கடலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்றும் தமிழகத்தில் இரவு 7 மணி வரை ஒரு சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடலூரில் லேசான மழை முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் எச்சரிக்கையுடனும் பாதுகாப்பாகவும் இருக்க அறிவுருத்தப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க

News April 13, 2025

குள்ளாஞ்சாவடி அருகே டிரைவரை தாக்கி பணம் பறிப்பு

image

திண்டிவனத்திலிருந்து குறிஞ்சிப்பாடிக்கு ஜல்லி ஏற்றிக்கொண்டு லாரியை தம்பிப்பேட்டையில் சாலையோரம் லாரி டிரைவர் நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் லாரியின் கண்ணாடியை உடைத்தும், டிரைவரை தாக்கியும் மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் டிரைவரின் செல்போன் மற்றும் ரூ.25,000 பணத்தை பறித்து சென்றனர். தொடரும் இந்த சம்பவம் லாரி டிரைவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News April 13, 2025

கடலூரில் மாவட்டத்தில் 102.56 டிகிரி வெயில் பதிவு

image

கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று 102.56 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் கடலூர் பகுதியில் பல்வேறு இடங்களில் சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் வெளியில் செல்லும் போது குடை மற்றும் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு SHARE பண்ணுங்க..

News April 13, 2025

கடலூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு

image

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில் ஏப்.,17ஆம் தேதி கடலூாில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!