Cuddalore

News March 15, 2025

சிதம்பரம் நடராஜர் கோவிலின் பொற்கூரையின் சிறப்பு தெரியுமா?

image

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மேலே இருக்கும் பொற்கூரையின் சிறப்பு என்ன தெரியுமா? கூரையின் மேலே 21,600 தங்கக் தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது. இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21,600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது. இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலின் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது. பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 15, 2025

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

image

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர் (Research Fellow) பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் 15-03-2025. தகுதியான நபர்களுக்கு Rs.25,000 வரை சம்பளம் கிடைக்கும். முழு விவரங்கள் <>லிங்க்<<>> இந்தப் இணையதத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SHARE NOW

News March 14, 2025

போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கிய ஆட்சியர்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற சமையல் போட்டி மற்றும் வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்றவர்களை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (14.03.2025) பரிசுகளை வழங்கினார். அப்போது பல்வேறு துறைகளின் அதிகாரிகள் மற்றும் போட்டியில் பங்கு பெற்றவர்கள் உடன் இருந்தனர்.

News March 14, 2025

கடலூரில் ‘கலைஞர் நூலகம்’: பட்ஜெட்டில் அறிவிப்பு!

image

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது இந்த நிலையில் பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்பாக “சேலம், கடலூர், நெல்லையில் ‘கலைஞர் நூலகம்’ அமைக்கப்படும் எனவும் போட்டித் தேர்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் தலா 1 லட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டுக் கூடம் வசதிகளுடன் கட்டப்படும்” என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

News March 14, 2025

மணிக்கொல்லை: தொல்லியல் அகழ்வாய்வு தமிழக அரசு அறிவிப்பு

image

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் மணிக்கொல்லையில் தொல்லியல் அகழ்வாய்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 14, 2025

கடலுார் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய அழைப்பு!

image

கடலுார் துறைமுகத்தில் இருந்து சிறிய கப்பல்கள் மூலம் சரக்குகள் இறக்குமதி, ஏற்றுமதி செய்ய தமிழ்நாடு கடல்சார் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இத்துறைமுகத்தின் வாயிலாக சரக்கு இறக்குமதி, ஏற்றுமதி செய்வது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு துறைமுக அலுவலகத்தை 04142 238025, 238026 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

விருத்தாச்சலம் தனி மாவட்டமாகுமா?

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட ஆண்டுகால கோரிக்கையாகும். இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள பட்ஜெட் தொடரில் விருத்தாச்சலம் தனிமாவட்டமாக அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடலூர் மக்களே இதுகுறித்து உங்கள் கருத்தை கமெண்ட் செய்யவும். மேலும், Share பண்ணுங்க.

News March 13, 2025

சிதம்பரம்: கடல் அலையில் சிக்கிய மாணவி உயிரிழப்பு

image

சிதம்பரம் அருகே பெரியகுப்பம் கடலில் குளித்த பிளஸ் 1 மாணவி நேற்று கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி பிரின்சி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். உடன் சிதம்பரம் டி.எஸ்.பி. சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

News March 13, 2025

கடலூர் ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்

image

கடலூர் ரேஷன் கடையில் பொருட்கள் எடை குறைவு பிரச்னைக்கு தீர்வு காண விற்பனை முனைய கருவியுடன் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தராசு இணைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எந்த முறையில் பொருட்கள் விநியோகம் செய்தாலும் எடை குறைத்து வழங்குவதாக புகார் உள்ளது. இந்த முறைகேட்டை தவிர்க்க நவீன தொழில்நுட்ப தராசு பி.ஓ.எஸ்., கருவி கொண்டு வரப்பட்டது.

News March 13, 2025

கடலூர் புத்தக திருவிழாவை முன்னிட்டு குறும்படம், புகைப்படப் போட்டி

image

கடலூரில் புத்தக திருவிழாவை முன்னிட்டு குறும்படம், மின்பதாகைகள், புகைப்படப் போட்டிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா 22.03.25 முதல் 31.03.25 வரை மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு முதல் மூன்று பரிசுகளாக ரூ.1,000, ரூ.700 ரூ.500 மதிப்பீட்டிலான புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும். SHARE NOW

error: Content is protected !!