India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூா் மாவட்டத்தில் மீலாது நபி தினத்தையொட்டி வரும் செப்.5-ம் தேதி, மதுபான கடைகளில் மது விற்பனை செய்யக்கூடாது என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளார். அரசு உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளா்கள், மேற்பாா்வையாளா்கள் மற்றும் உரிமதாரா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாக சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து வந்த மத்திய நிலத்தடி நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் விருத்தாசலத்தில் மேற்கொண்ட ஆய்வில், வெறும் 5 ஆண்டுகளில் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் 33 மீட்டர் அளவிற்கு குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. (SHARE பண்ணுங்க)
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் எம்எல்ஏ இராதாகிருஷ்ணன் இன்று (செப். 03) மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயண விபரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 9.30 மணியளவில் விருத்தாசலம் ஒன்றியம் தொட்டிக்குப்பம் ஊராட்சியில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து காலை 10 மணியளவில் தொட்டிக்குப்பம் ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் (02/09/2025) இரவு கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டது. இதனை மற்றவர்களுக்கும்
தேசிய அளவில் கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு ரூ.35,000 முதல் 80,000 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்து விருப்பம் உள்ளவர்கள் செப்.,21-ம் தேதிக்குள் <
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. <<17592947>>(பாகம்-2<<>>)
▶️கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
▶️ ஏற்கனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
▶️ விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
▶️ இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க..
அனைத்துக் கட்சி சார்பில் திருப்பாதிரிப்புலியூரில் வரும் 3ம் தேதி நடக்க இருந்த ரயில் மறியல் போராட்டம் வரும் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. கடலுாரில் ஆர்.டி.ஓ., அபிநயா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில், நாளை 3ம் தேதி நடக்க இருந்த மறியல் போராட்டம் 15ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. இதில், தாசில்தார் மகேஷ், டி.எஸ்.பி.,ரூபன்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது வாழ்க்கை கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற ஒரு வழி இருக்கு! ஆம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக கடலூர் மாவட்டத்தில் சுமார் 693 வீடுகளை அரசு மானிய விலையில் வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் <
Sorry, no posts matched your criteria.