India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் முதுநகர் துறைமுகம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கு துவக்கம், ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு ஐயப்பன் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.இதில் தலைமை ஆசிரியர் ஜெயந்தி, தபால் துறை கோட்ட கண்காணிப்பாளர் கணேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் இன்று மனு கொடுக்க வந்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது,தமிழ்நாடு முழுவதும்100க்கும் மேற்பட்ட நுண் நிதி நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இவைகள் அனைத்தும் பெண்களுக்கு தனிநபர் கடன் வழங்குகின்றன இதில் அதிக வட்டி வசூலிப்பதாகவும் பெண்கள் வட்டி கட்ட முடியாவிட்டால் மனரீதியாக தொல்லை கொடுப்பதாகவும் இதனை ஒழுங்குபடுத்த வலியுறுத்தினர்.
கடலூர் மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் 24-25ம் ஆண்டிற்கான கடன் வழங்கும் லோன் மேளா கடலூரில் இன்று நடைபெற்றது.இதற்கு வங்கியின் இணைப்பதிவாளர் திலீப்குமார் தலைமை தாங்கினார்.இதையடுத்து மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையக கிளை, புதுப்பாளையம், மஞ்சக்குப்பம், கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி ஆகிய 9 கிளைகளின் எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்கு அரசு திட்டம் சார்ந்த கடன், விவசாயம் சார்ந்த கடன் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 தாலுகா அலுவலகங்களிலும் இன்று முதல் வருகிற 27-ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை கடலூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. இதற்கு தனித் துணை ஆட்சியர் ரமா தலைமை தாங்கினார். தாசில்தார் பலராமன் முன்னிலை வகித்தார். இதையடுத்து பொதுமக்கள் குடும்ப அட்டை, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனு அளித்தனர்.
கடலூர் எம்.ஜி.ஆர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25ம் ஆண்டிற்கான 1 ஆண்டு முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்க்கை நடக்கிறது.தகுதியுடையோர் நேற்று முதல் ஜூலை 19ஆம் தேதி வரை www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் icmcuddrmgr@gmail.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என மண்டல இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கடலூர் முதுநகரில் உள்ள ஒரு ஓட்டலில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்மத் கான் (20) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று கடலூர்-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். முதுநகர் கல்யாண மண்டபம் அருகே சென்றபோது அங்கு நின்றிருந்த டிப்பர் லாரி மீது பைக் மோதியது. இதில் இஸ்மத் கான் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து கடலூர் முதுநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
கடலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மீண்டும் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது.இந்த நிலையில் நேற்று கடலூர் 37 டிகிரி செல்சியஸ்,சிதம்பரம் 37 டிகிரி செல்சியஸ்,புவனகிரி 37 டிகிரி செல்சியஸ்,காட்டுமன்னார்கோயில் 37 டிகிரி செல்சியஸ்,நெய்வேலி 37 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 38 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 37 டிகிரி செல்சியஸ் மற்றும் பண்ருட்டியில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது
பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு புழு கொடுத்து சாக்லேட் மற்றும் கிரீடம் வைத்து வரவேற்கப்பட்டனர்.இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ ஐய்யப்பன் கலந்துகொண்டு அனைத்து மாணவர்களையும் பூ கொடுத்து வரவேற்றார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர்,திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஆதார் கார்டு எடுக்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.இதனை கலெக்டர் அருண் தம்புராஜ், எம்எல்ஏ ஐய்யப்பன், மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மாணவிகளுக்கு ஆதார் கார்டு பதிவு செய்து உடனே ஆதார் கார்டு வழங்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கலந்து கொண்டார்.
கடலூர் வெள்ளக்கரை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளதால் வெள்ளக்கரை, கிழக்கு ராமாபுரம், மேற்கு ராமாபுரம், மாவடிப்பாளையம், ஓதியடிக்குப்பம் , அரசடிக்குப்பம்,குறவன்பாளையம்,சாத்தங்குப்பம், வி.காட்டுப்பாளையம்,கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம் ஆகிய இடங்களில் நாளை (11-ம் தேதி) காலை 9 மணியில் இருந்து மதியம் 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என கடலூர் செயற்பொறியாளர் வள்ளி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.