India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ரபி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிட்டா, அடங்கல் உள்ளவர்கள் வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை கொண்டு இ-சேவை மையம் வாயிலாக பயிர் காப்பீடு செய்யலாம். மக்காச்சோளத்துக்கு அக்டோபர் 31 வரையிலும், நெல், பருத்தி, உளுந்துக்கு நவம்பர் 15ஆம் தேதி வரையிலும் பயிர் காப்பீடு செய்யலாம் என இன்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (அக்.,23) காலை 8.30 மணி நிலவரப்படி பெலாந்துறை 32.5 மி.மீ, கீழ்செருவாய் 26 மி.மீ, மே.மாத்தூர் 23 மி.மீ, வேப்பூர் 19.1 மி.மீ, காட்டுமைலூர் 19 மி.மீ, தொழுதூர் 16 மி.மீ என மாவட்டம் முழுவதும் 173.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. உங்கள் பகுதியில் மழையா கமெண்ட் பண்ணுங்க!

கடலூர் மாவட்டத்தில் நாளை (அக்.,24) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு வெளியானது. கடலூர் ஓடி என்.எஸ் மகால், வடலூர் ஆர்.சி.சர்ச் மண்டபம், தர்மநல்லூர் மேல்நிலைப் பள்ளி, காடாம்புலியூர் ஊராட்சி ஒன்றிய பெண்கள் தொடங்க பள்ளி, தொழுதூர் மேல்நிலைப் பள்ளி, குமாரபுரம் கிருஷ்ணசாமி கல்லூரியில் நடைபெற உள்ளது.

கடலூர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <

கடலூர் மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (அக்.22) நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். செம்மண்டலத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமில் 15க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில், 10-ம் வகுப்பு,12-ம் வகுப்பு ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்த இளைஞர்கள் பங்கேற்று பயன்படலாம் என தெரிவித்துள்ளார்.

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள 50 மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: வங்கி வேலை
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.64,000-ரூ.1,20,940
4. வயது வரம்பு: 25-32
5. கடைசி தேதி : 30.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7.அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க!

குள்ளஞ்சாவடி அடுத்த தங்கலிகுப்பத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் என்பவரது மகன் தொழிலாளி மணி (55). இவர் நேற்று தனக்கு சொந்தமான ஆடு, மாடுகளை பெருமாள் ஏரிக்கரை அருகில் உள்ள வடிகால் வாய்க்கால் அருகே மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென வாய்க்காலில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.22) இரவு 10 மணி முதல் இன்று (அக்.23) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் இன்று(அக்.22) கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில், பெட்டிஷன் மேளா நடைபெற்றது. இதில், காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் சம்பந்தமாக நேரடியாக விசாரணை மேற்கொண்டு, புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட காவர்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தவிட்டார்.
Sorry, no posts matched your criteria.