India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு, புற்றுநோய், பக்கவாதம், நீரிழிவு நோய் மற்றும் காசநோய் போன்ற நெடிய நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட சிறப்பு மருத்துவ முகாம் வரும் 20ஆம் தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், இப்பயிற்சிக்கு பின்னர் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் <
மங்கலம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் சொந்தமாக டியூஷன் நடத்தி வருகிறார். கடந்த 14ம் தேதி காலை டியூஷனுக்கு வந்த பிளஸ் 2 மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது குறித்து மாணவியின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் நேற்று வெங்கடேசனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குறிஞ்சிப்பாடி மேல கொளக்குடியைச் சேர்ந்தவர் பார்த்திபன்(32). இவர் நேற்று சிதம்பரம் அடுத்த வேலக்குடி பைபாஸ் மேம்பாலத்தில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராமல் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிஞ்சிப்பாடி மேல கொளக்குடியைச் சேர்ந்தவர் பார்த்திபன்(32). இவர் இன்று சிதம்பரம் அடுத்த வேலக்குடி பைபாஸ் மேம்பாலத்தில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராமல் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 19ஆம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார், அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், மக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு மற்றும் அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்.
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு<
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மாங்க்ரோவ் காடுகள் எனும் சதுப்பு நில காடுகள் 1350 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது உலகின் 2ஆவது சதுப்பு நிலக் காடுகள் என்ற பெருமைக்கும் உரியதாகும். வனத்துறை சார்பில் படகுகளும் இங்கு இயக்கப்படுகின்றன. ஒருமுறை இங்கு சென்று விசிட் அடியுங்கள்..அந்த அனுபவமே அலாதியானது. இயற்கை விரும்பிகளுக்கு SHARE பண்ணுங்க..
கடலூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு இந்த போலீசாரின் செல்போன் எண்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் 3ஆவது புத்தகத் திருவிழா வரும் 22ஆம் தேதி துவங்குகிறது. இதில் பாரம்பரிய உணவு கூடங்கள், 360 சுய வீடியோ கூடம், கோளரங்கம், 3D அரங்கம், V.R அரங்கம், COMICS அரங்கம், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான அனுமதி இலவசம் என்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளவும் என்றும் கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.