Cuddalore

News September 4, 2025

கடலூர்: தண்ணீர் வாளியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

image

கடலூர் கே.என்.பேட்டையைச் சேர்ந்தவர் சிவசங்கரன். இவரது மனைவி ஞான சௌந்தரி. இவர்களுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் குணஸ்ரீ (1) என்ற குழந்தை இன்று (செப்.4) காலை தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது வீட்டிலிருந்த தண்ணீர் வாளியில் குழந்தை குணஸ்ரீ தவறி விழுந்து உயிரிழந்தது. இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

News September 4, 2025

கடலூர்: தண்ணீர் வாளியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

image

கடலூர் கே.என்.பேட்டையைச் சேர்ந்தவர் சிவசங்கரன். இவரது மனைவி ஞான சௌந்தரி. இவர்களுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் குணஸ்ரீ (1) என்ற குழந்தை இன்று (செப்.4) காலை தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது வீட்டிலிருந்த தண்ணீர் வாளியில் குழந்தை குணஸ்ரீ தவறி விழுந்து உயிரிழந்தது. இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

News September 4, 2025

கடலூர் மக்களே முற்றிலும் இலவசம்-Don’t Miss It

image

கடலூர் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் செய்யவும்<<>> அல்லது உங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம். SHARE பண்ணுங்க!

News September 4, 2025

கடலூர் மக்களே கலெக்டர் சொன்ன Good News !

image

கடலூர் மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகள் அல்லது வேளாண் பட்டயப்படிப்பை முடித்தவர்கள் 30 சதவீத மானியத்துடன் உழவர் நல சேவை மையம் அமைக்கலாம். அதற்கு 45 வயதுக்குட்பட்டோர் வங்கியில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் ஒப்புதல் பெற www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணையதளத்தில் மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம் எனகடலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்த அரிய வாய்ப்பை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 4, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (செப்.3) இரவு 10 மணி முதல் இன்று(செப்.4) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 3, 2025

கடலூர் மக்களே.. மின்வாரியத்தில் வேலை! APPLY NOW!

image

கடலூர் மக்களே! தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளோர் அக்.2-ம் தேதிக்குள் இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

News September 3, 2025

கடலூர் மக்களே… சொந்த தொழில் தொடங்க ரூ.3 லட்சம் மானியம்!

image

கடலூர் மக்களே.. சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு. தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி, வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடைய பெரும் உதவியாக இத்திட்டம் இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க கடலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகவும். இதை SHARE பண்ணுங்க.

News September 3, 2025

நெய்வேலி போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்

image

நெய்வேலி போலீஸ் ஏட்டு ராஜா கடந்த 28.08.2025 அன்று கார் ஓட்டிக்கொண்டு சென்றபோது பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றார். இந்த விபத்தில் கோவிந்தராசு மனைவி தங்கமணி என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி பொதுமக்கள் காவல்துறையினர் மீது நன்மதிப்பை இழக்கும் வகையில் நடந்து கொண்ட ராஜாவை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. ஜெயக்குமார் இன்று உத்தரவிட்டார்.

News September 3, 2025

கடலூர்: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

image

கடலூா் மாவட்டத்தில் மீலாது நபி தினத்தையொட்டி வரும் செப்.5-ம் தேதி, மதுபான கடைகளில் மது விற்பனை செய்யக்கூடாது என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளார். அரசு உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளா்கள், மேற்பாா்வையாளா்கள் மற்றும் உரிமதாரா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

News September 3, 2025

கடலூர்: ஊராட்சி ஒன்றியங்களில் வேலை

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக் <<>>செய்யவும். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!