Cuddalore

News July 16, 2024

ஆட்சியர் அருண் தம்புராஜின் புதிய பதவி

image

கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த டாக்டர். அருண் தம்புராஜ் தற்போது பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து கடலூர் மாவட்ட புதிய ஆட்சியராக சி.பி ஆதித்ய செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த டாக்டர் அருண் தம்புராஜ் மருத்துவத்துறை திட்ட இயக்குனராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News July 16, 2024

கடலூரில் 19 ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம்

image

கடலூர் வேலைவாய்ப்பு மையத்தில் வரும் 19அம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் தனியார் நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு ஆட்களை தேர்வுசெய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்குகின்றனர். அதனால் 10 & 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் அருண் தம்புராஜ் இன்று தெரிவித்துள்ளார். தெரிஞ்சவங்களுக்கு SHARE பண்ணலாமே!

News July 16, 2024

கடலூரில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று(ஜூலை 16) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரவித்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்திலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு( 7 மணி வரை) மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. கடந்த 4 நாட்களாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News July 16, 2024

கோப்பையை வென்ற கபடி வீரர்களுக்கு SP பாராட்டு

image

தென்னிந்திய அளவிலான 40 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவு கபடிபோட்டி திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 13,14 ஆகிய தேதிகளில்  நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட கபடி அணி சார்பில் காவல்துறை சிறப்பு உதவிஆய்வாளர் கதிரவன் தலைமையில் தலைமை காவலர்கள் ஞானமுருகன், குணசேகரன் உட்பட 10 வீரர்கள் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்றனர். இதையடுத்து கோப்பையை  வென்ற கபடி வீரர்களை கடலூர் எஸ்.பி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

News July 16, 2024

கடலூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் நியமனம்

image

கடலூர் மாவட்ட ஆட்சியராக டாக்டர். அருண் தம்புராஜ் பணி செய்து வந்தார். இவர் தற்போது பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடலூர் மாவட்ட புதிய ஆட்சியராக சி.பி ஆதித்ய செந்தில்குமார் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

News July 16, 2024

குழந்தை திருமணம் தொடர்பாக 4 பேர் மீது வழக்கு

image

புவனகிரி அடுத்த ஜெயங்கொண்டானில் நேற்று வடகரை பகுதியை சேர்ந்த பிரபுவுக்கும்(29), 17 வயதான சிறுமிக்கும் திருமணம் நடக்கவிருந்தது. இதுபற்றி தகவலறிந்த வட்டார மகளிர் ஊர்நல அலுவலர் பஞ்சவர்ணம் தலைமையிலான அதிகாரிகள் சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் சிறுமியை திருமணம் செய்ய இருந்த பிரபு (29) மற்றும் உடந்தையாக இருந்த 4 பேர் மீது மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News July 16, 2024

தபால் நிலையத்தில் வேலை: ரூ.30,000 வரை சம்பளம்

image

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <>ஆன்லைன்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.

News July 16, 2024

ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

image

கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்தில் நேற்று மாலை ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமலுக்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் செயலாளர் சுந்தரராஜன் தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

News July 16, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்களின் மனுக்கள்

image

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு டிஆர்ஓ ராஜசேகர் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். இதில் முதியோர் உதவித்தொகை, கல்விக்கடன், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன.

News July 16, 2024

கடலூர் அருகே மூன்று பேர் எரித்து கொலை; தனிப்படைகள் அமைப்பு

image

கடலூர் அருகே காரமணிக்குப்பத்தில் கடந்த 13-ம் தேதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.3 பேர் கொல்லப்பட்ட பிறகு எரித்து கொல்லப்பட்டதாக நேற்றைய விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்பி, 5 தனிப்படைகள் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.கொலைக்கான காரணம் குறித்து கடலூர் காவல்துறை விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!