India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பண்ருட்டி எம்எல்ஏ மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலும், வளங்களையும் கொள்ளையடித்து பல இலட்சம் கோடிகளை வாரி சுருட்டிச் சென்று விட்டு, தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாது என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மனச்சான்று இல்லாமல் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில்(BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லர், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இங்கு <

ஹரியானாவில் நடைபெற்ற அகில இந்திய தேசிய பாதுகாப்பு படை முகாமில் 20 மாநிலங்களில் இருந்து 257 கமாண்டோ படை வீரர்கள் கலந்து கொண்டு 45 நாட்கள் பயிற்சியினை மேற்கொண்டனர், இப்பயிற்சியின் இறுதியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மல்யுத்த மாணவர் மற்றும் தமிழ்நாடு கமாண்டோ படை வீரர் அஜித் முதலிடம் பிடித்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

கடலூர் மாநகராட்சிக்கு ரூ.28.95 கோடி வரி பாக்கி உள்ளது. மேலும் 30 நாட்களுக்குள் வரி செலுத்தினால் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அனு தெரிவித்துள்ளார். சொத்து உரிமையாளா்கள் தங்களது 2023-24 ஆம் ஆண்டுக்கான முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் முதல் 30 நாட்களுக்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் அமைந்துள்ள விருத்தகிரீஸ்வரர் கோயில் சோழ ராணி செம்பியன் மகாதேவியால் காவிரி நதிக்கரையில் கட்டப்பட்ட கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயிலில் சோழர் காலத்தைச் சேர்ந்த பல கல்வெட்டுகள் உள்ளன. இந்த கோயில் விருத்தாச்சலம் நகரத்திற்கு அதன் பெயரைக் கொடுக்கிறது. இந்த கோயிலில் வரும் மார்ச் மாதம் 12ஆம் தேதி மாசி மகம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது

கடலூர் மாவட்ட விவசாயிகள் வேளாண் அடுக்ககம் திட்டத்தில் நில விபரங்களை பதிவு செய்யுமாறு வேளாண் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். விவசாயிகளின் ஆவணங்களை பெற்று அடையாள எண் வழங்கப்படும். அதன் அடிப்படையில் அரசின் திட்டங்கள் சரியான பயனாளிக்கு சென்றடைவது உறுதிப்படுத்த முடியும். எனவேஅந்தந்த பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் நில ஆவணங்களை வேளாண் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

கடலூர், கட்டியங்குப்பம் பகுதியைச் சேர்ந்த கோபாலகண்ணன், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கோபால கண்ணன் மனைவி விஜயாவிற்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக கணவன் மனைவியிடையே தகராறு இருந்த நிலையில், விஜயா மீன்குழம்பில் விஷம் வைத்து கணவனை கொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசார் விஜயா மற்றும் அவருக்கு உதவியாக செயல்பட்ட தேவநாதன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். கடலூர் மாவட்டத்தில் மட்டும் 51 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

கடலூர் மாவட்டம் மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் மறைந்த திருஅறை திறக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை 12 மணிக்கு திறக்கப்பட்ட திருஅறை பக்தர்கள் தரிசனம் செய்த பின்பு இரவு 7 மணிக்கு கதவு மூடப்பட்டு கோவில் செயல் அலுவலர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும் அடுத்த ஆண்டு இந்த சீல் அகற்றப்பட்டு திருவரை தரிசனம் நடைபெறும்.

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <
Sorry, no posts matched your criteria.