India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நகர் கிராமம், கோமுகி ஆறு பகுதியில் ட்ராக்டரில் மணல் கடத்திய 2 நபர்களை, வேப்பூர் போலீசார் கைது செய்தனர். மேலும் , மேல்புவனகிரி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்துகொண்டிருந்த 3 நபர்களை புவனகிரி போலீசார் கைது செய்தனர். மேலும் காரைக்காடு இ சேவை மையத்தில் ரூ.700 திருடிய 3 நபர்கள் முது நகர் போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று கடலூர் 34 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 34 டிகிரி செல்சியஸ், புவனகிரி 34 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 34 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 36 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மத்திய அரசின் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் தனிநபர் இல்ல கழிவறைகள் கட்ட ரூ.12 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. இதற்கிடையில் கடலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 35 ஆயிரம் தனிநபர் கழிவறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தற்போது வரை 15 ஆயிரம் தனிநபர் கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளது. மீதமுள்ள கழிவறைகளை கட்ட ஊக்கப்படுத்தப்பட்டு வருவதாக தூய்மை பாரத இயக்க திட்ட அதிகாரி தெரிவித்துளார்.
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (17/08/2024) கடலூர் காவல் ஆய்வாளர் தீபா, சிதம்பரம் காவல் ஆய்வாளர் ஜெர்மின்லதா, விருத்தாசலம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன், சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் சந்திரா ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கலாம் என்ற தவறான பதிவுகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இத்தகைய தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே சமூக வலைதளங்களில் பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கடலூர் மாவட்டம் சார்பில் 2024-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. தகுதியுடையோர் WWW sdat.tn.govt.in என்ற இணையதளத்தில் வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை இடி-மின்னலுடன் சாரல் மழை பெய்தது. இதில் இன்று காலை நிலவரப்படி சேத்தியாதோப்பில் 3.2 மி.மீ. மழையும், கடலூரில் 3 மி.மீ., கொத்தவாச்சேரியில் 2 மி.மீ., வானமாதேவியில் 1.4 மி.மீ., புவனகிரி, லால்பேட்டை மற்றும் சிதம்பரத்தில் தலா 1.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு இரண்டு முறை சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. மும்பையில் இருந்து ஆக.27, செப்.6 தேதிகளிலும், வேளாங்கண்ணியில் இருந்து ஆக.29, செப்.8 தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு துவங்கி உள்ளது. இந்த ரயில் புனே, சோலாபூர், ராய்ச்சூர், ரேணிகுண்டா, திருவண்ணாமலை, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் வழியாக செல்லும்.
கடலுாரில் ரவுடியை வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கம்மியம்பேட்டையைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் நேற்றிரவு (ஆக.16) 10:00 மணிக்கு கம்மியம்பேட்டை அய்யனார் கோவில் அருகில் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 பேர் திடீரென மூர்த்தியை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுதந்திர தினம் அன்று தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் விடுமுறை அளிக்கவேண்டும். இதை மீறினால் மாற்று விடுப்பு அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் ஞானரகாசம் தலைமையில் அதிகாரிகள், கடலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்து சுதந்திர தினம் அன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 41 நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
Sorry, no posts matched your criteria.