Cuddalore

News July 31, 2024

சிங்கப்பூரில் தோட்டங்களை பார்வையிட்ட கடலூர் அமைச்சர்

image

கடலூர் மாவட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று சிங்கப்பூர் மெரினா நீர் தேக்கத்தை ஒட்டி, 260 ஏக்கரில் அமைந்துள்ள, “தி கார்டன்ஸ் பை தி பே” பூங்காவில் உள்ள மூன்று நீர்முனை தோட்டங்களை பார்வையிட்டார். தொடர்ந்து உலகின் மிகப்பெரிய கண்ணாடி பசுமை இல்லத்தையும் பார்வையிட்டார்.

News July 31, 2024

மூளைச்சாவடைந்த மாணவனின் கண்கள் தானம்

image

வடலூரில் செயல்பட்டு வரும் எஸ்டி சியான் பள்ளியில், கடந்த 24-ம் தேதி ஈட்டி எறிதல் பயிற்சியின்போது, பத்தாம் வகுப்பு மாணவர் கிஷோர் தலையில் ஈட்டி பாய்ந்தது. இதனால் மூளைச்சாவடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் மாணவனின் கண்கள் தானமாக வழங்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News July 30, 2024

கடலூர் மாவட்டத்தில் இன்றைய வெப்பநிலை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று (3/07/2024) கடலூர் 38 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 36 டிகிரி செல்சியஸ், புவனகிரி 36 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 36 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 35 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 35 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 35 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 35 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

News July 30, 2024

கடலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News July 30, 2024

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

image

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால், கொள்ளிடம் ஆற்றில் எந்நேரத்திலும் உபரி நீரானது திறந்து விடப்படும். அதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் மற்றும் அதனைச் சார்ந்த தாழ்வான கிராம பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் சம்மந்தப்பட்ட சார் ஆட்சியர்/வட்டாட்சியரின் உரிய அறிவுரைக்குப்பின் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயார் நிலையில் இருக்குமாறு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று தெரிவித்தார்.

News July 30, 2024

வடலூர் மாணவன் உயிரிழப்பு; ஆசிரியர் கைது

image

வடலூர் தனியார் பள்ளி ஒன்றில் மாணவன் கிஷோர் தலையில் ஈட்டி பாய்ந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கையில், பள்ளியின் கணித ஆசிரியர் பிரவீன் குமார் அன்றைய தினம் விளையாட்டு பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர் பிரவீன் குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

News July 30, 2024

கடலூரில் விழிப்புணர்வு பேனர்கள்

image

கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் உற்பத்தி, விற்பனை, கஞ்சா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை நடைபெறுவது குறித்து தெரியவந்தால் பொதுமக்கள், காவல்துறை மதுவிலக்கு பிரிவு கைபேசி எண்ணில் (7418846100) தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு பேனர்கள், கடலூர், குண்டு சாலை உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்கப்பட்டுள்ளன.

News July 30, 2024

வடலூர் மாணவனுக்கு இ.பி.எஸ் இரங்கல்

image

வடலூரில் ஈட்டி தலையில் பாய்ந்து மாணவன் கிஷோர் உயிரிழந்ததற்கு, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ‘எக்ஸ்’ தளத்தில் கூறியிருப்பதாவது: அன்பு மகனை இழந்து தவிக்கும் கிஷோரின் பெற்றோர்களுக்கு எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

News July 30, 2024

விருத்தாசலம் இளம் பெண் படுகொலை

image

விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரை சேர்ந்தவர் கண்ணதாசன் மனைவி செல்லக்கிளி(37). சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த செல்லக்கிளியை மர்மநபர் இரும்பு கம்பியால் தாக்கியதில் படுகாயமடைந்த அவர், தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து செல்லக்கிளியை கொலை செய்தது யார்? என்று விசாரித்து வருகின்றனர்

News July 30, 2024

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சான்றிதழ்களை வழங்கினார்.

error: Content is protected !!