India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் பேரிடர் கால கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையை 1077 04142 – 220700 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். மேற்படி பெறப்படும் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் வல்லம்படுகை, எருக்கன், கட்டுப்படுகை கிராம தண்ணீரில் முழ்கும் அபாயத்தில் உள்ளது. ஆகையால் பொதுமக்கள் அனைவரும் புயல் வெள்ள பாதுகாப்பு மையத்தில் தங்கி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு கொள்ளிடம் ஆற்றில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்து.
இந்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் எம்பி நேரில் சந்தித்து சிதம்பரம், பரங்கிப்பேட்டை மற்றும் அரியலூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மனுவை அளித்தார். இந்த கோரிக்கை நிறைவேறும் என்கிற நம்பிக்கை அளிக்கும் வகையில் அவரது அணுகுமுறை அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ஜாதி பெயரை கூறி இழிவுபடுத்தியதாக கடலூர் மஞ்சக்குப்பம் அம்பேத்கார் சிலை அருகில் நேற்று மாலை காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது மாவட்ட தலைவர் திலகர் தலைமையில் கட்சியினர் மோடி உருவபடத்தை தீயிட்டு கொழுத்தினர். இதனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 60 பேர் மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தாம்பரத்தில் இருந்து திருப்பாதிரிப்புலியூர் வரை இன்று இரவு (ஆகஸ்ட்.2) சிறப்பு ரயில் உள்ளது. தாம்பரத்தில் நாளை வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு புறப்படும் 12 முன்பதிவில்லா பெட்டிகளை கொண்ட மெமு ரயில் விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், தஞ்சாவூர், பூதலூர் வழியாக மறுநாள் காலை 6.40க்கு திருச்சி சென்றடையும்.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி, கடலூர் மாவட்டம், வேப்பூரில் 2 செ.மீ., காட்டுமைலூரில் 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மழையினால் பல்வேறு இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் சில இடங்களில் பரவலாக மழை பெய்ததால் வெப்பநிலை சற்று குறைந்து பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இன்று கடலூர் 37 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 37 டிகிரி செல்சியஸ், புவனகிரி 37 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 37 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 38 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறிஞ்சிப்பாடியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேட்டுர் அணையில் இருந்து அதிகப்படியான உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுவதால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரமுள்ள ஏய்யலூர் மற்றும் அணைக்கரை பகுதியில் வடக்கு ராஜன் கால்வாய் வெள்ள தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (01/08/2024) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் கணபதி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் ஜெர்மின்லதா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
மாநில அளவிலான துப்பாக்கி சூடு போட்டி கோயம்புத்தூரில் நடந்தது. இதில் நெய்வேலி காவல் நிலைய தலைமை காவலர் ராஜேஸ்வரி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு மற்றும் 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் தேர்ச்சி பெற்று தென்னிந்திய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார். மேலும் இவரது மகன் மோனிஷ் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார். அவர்களை இன்று கடலூர் எஸ்.பி. ராஜாராம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.