Cuddalore

News March 2, 2026

கடலூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

கடலூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <>க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News March 2, 2026

கடலூர்: வேட்பு மனு தாக்கல் செய்த அமைச்சர்!

image

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் கடந்த தேர்தலில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை நேற்று அண்ணா அறிவாலயத்தில் நேரில் சென்று வழங்கினார். உடன் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News March 1, 2026

காடாம்புலியூர் அதிமுக நிர்வாகி உயிரிழப்பு: EPS இரங்கல்

image

பண்ருட்டி பணிக்கன்குப்பம் ஊராட்சியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் A. வேலு காடாம்புலியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து‌ கொண்ட நிலையில், திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல், அனுதாபத்தையும் இன்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

News March 1, 2026

கடலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<> eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 1, 2026

கடலூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

கடலூர்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு வேலை!

image

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.

News March 1, 2026

கடலூர்: குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் மார்ச் 2 மற்றும் மார்ச் 3 ஆகிய இரண்டு நாட்கள், அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் இந்த நாட்களில் அத்தியாவசிய பொருட்களை பெற்று பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 1, 2026

கடலூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே <<>>கிளிக் செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

நெய்வேலி: ரூ.14 லட்சம் குட்கா கடத்தியவர் கைது

image

நெய்வேலி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் இன்று நெய்வேலி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக காரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்த பாலு (53) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள 305 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

News February 28, 2026

கடலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

கடலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!