Cuddalore

News March 3, 2026

கடலூர்: 5323 கிலோ குட்கா பொருட்கள் அழிப்பு

image

கடலூர் மாவட்டம் முழுவதும் 5,323 கிலோ 431 கிராம் குட்கா பொருட்களை போலீசார் நேற்று தீ வைத்து அழித்தனர். இதில் கடலூர் உட்கோட்டத்தில் 622 கிலோ 498 கிராம், சிதம்பரத்தில் 2507 கிலோ, விருத்தசாலத்தில் 399 கிலோ 79 கிராம், நெய்வேலியில் 280 கிலோ 544 கிராம், சேத்தியாத்தோப்பில் 196 கிலோ 887 கிராமம், பண்ருட்டியில் 549 கிலோ 862 கிராம், திட்டக்குடியில் 767 கிலோ 500 கிராம் அழிக்கப்பட்டது.

News March 3, 2026

கடலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.<<>>in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News March 3, 2026

கடலூர் ஆட்சியரிடம் வழங்கிய ஆக்ஸி மீட்டர்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட 240 எண்ணிக்கையிலான ஆக்ஸிமீட்டரை, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மருத்துவ பயன்பாட்டிற்காக துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் மரு.ராஜா அவர்களிடம் நேற்று (02.03.2026) வழங்கினார். உடன் இந்திய செஞ்சிலுவை சங்க செயலாளர் பாலசுப்பரமணியம் உட்ப பலர் உள்ளனர்.

News March 3, 2026

கடலூர்: பாட்டாளி மக்கள் கட்சி பிரச்சாரம்

image

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடலூர் மேற்கு ஒன்றியம் நடுவீரப்ட்டு, புதுக்குப்பம், பட்டீஸ்வரம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், வாக்குச்சாவடி திருவிழா என்ற பெயரில், திமுக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை துண்டு பிரசுரமாக வினியோகம் செய்து, நேற்று பிரச்சாரம் மேற்கொண்டனர். மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 3, 2026

கடலூர்: தூக்கில் தொங்கிய ஆசிரியர்

image

திட்டக்குடியை அடுத்த இறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன் (35) ஆசிரியர், மனைவி ஸ்வேதாவுடன் காந்தி நகரில் வசித்து வருகின்றனர். கணவன் மனைவியிடையே ஏற்பட்ட பிரச்சனையில் மனம் உடைந்த நரசிம்மன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மருத்துவமனை சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 2, 2026

கடலூர்: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

image

கடலூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – ரூ.10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <>இங்கு க்ளிக் <<>>செய்து புகார் தெரிவியுங்க.. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க!

News March 2, 2026

கடலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

கடலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு க்ளிக் செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News March 2, 2026

கடலூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் / சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தி
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 2, 2026

கடலூர் மாவட்டத்தில் 25 தாசில்தார்கள் இடமாற்றம்

image

கடலூர் மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வேலைபார்த்து வரும் 25 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி – ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ளார். இதில் கடலூர் தாசில்தார் மகேஷ், பண்ருட்டி தாசில்தாராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News March 2, 2026

கடலூர்: கலைஞர் வருமுன் காப்போம் திட்டம்; 2 லட்சம் பேர் பயன்

image

கடலூர் மாவட்டத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, மக்களுக்கு சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. இதில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 184 பேர் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அலுவகர்கள் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!