India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய ரிசர்வ் வங்கியில் Assistant (உதவியாளர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 650
3. சம்பளம்: ரூ.58,514
4. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 20-28
6. கடைசி தேதி: 08.03.2026
7.விண்ணப்பிக்க:<
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க.

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின்<

கடலூர் மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது<

கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் மகாராஜா(28). இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார். இதையடுத்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்ற போது, அங்கிருந்த டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலூர் அனைத்து மகளிர் போலீசார் மகாராஜா மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிதம்பரம் அடுத்த கண்ணங்குடியை சேர்ந்தவர் கண்ணன்(46). திமுக கிளை செயலாளரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் குமரேசனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த விரோதம் காரணமாக இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் ஒருவரையொருவர் திட்டி தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் இருதரப்பை சேர்ந்த கண்ணன், குமரேசன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் வேணுகோபால்(32). என்எல்சி 2-வது சுரங்கத்தில் இன்ஜினீயராக வேலை பார்க்கும் இவர் நெய்வேலியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில், நேற்று அவர் தான் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெய்வேலி போலீசார் வழக்குப்பதிந்து வேணுகோபால் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் அகர ஆலம்பாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், திமுக மாவட்ட பிரதிநிதியுமான ஆர்.சங்கர் திமுகவில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து, MLA அருண்மொழித்தேவன் தலைமையில் தனது ஆதரவாளர்களுடன் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

சிதம்பரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் முகுந்தன்(14). சிதம்பரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த முகுந்தன், நேற்று அருகே உள்ள வண்ணான் குளத்திற்கு தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்ற முகுந்தன், நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காடாம்புலியூர் அடுத்த சீரங்குப்பத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி(45). இவர் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை நேரத்தில் அங்கு காரில் வந்த 3 பேர், முத்துலட்சுமியின் 4 ஆடுகளை காரில் திருடி சென்றனர். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து பண்ருட்டியை சேர்ந்த விஷ்ணுவரத்தை(19) கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் தற்போது யூரியா 5,558 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி 2,242 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 1,810 மெட்ரிக் டன்னும், காம்ப்லக்ஸ் உரம் 7,853 மெட்ரிக் டன்னும், சூப்பர் பாஸ்பேட் 1,457 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 18,919 மெட்ரிக் டன் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனால் தேவைப்படும் விவசாயிகளுக்கு உரம் தடையின்றி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.