India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிதம்பரம் அருகே வடக்கு சாவடியை சேர்ந்த ஜெகஜீவா மற்றும் நஞ்சமகத்து வாழ்க்கையை சேர்ந்த விஷ்வா ஆகிய இருவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை அங்குள்ள பனங்காடு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். இதைப்பற்றி சிறுவனது உறவினர்கள் கிள்ளை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் ஜெகஜீவாவை கைது செய்து தலைமறைவான விஷ்வாவை தேடி வருகின்றனர்.
சிதம்பரம் கொள்ளிடம் மற்றும் வெள்ளாற்றில் கதவணை கட்டும் திட்டத்தை மக்களுக்கு பயனளிக்காத திட்டம் என்று கூறி சமீபத்தில் தமிழக அரசு கைவிட்டது. அதனை கண்டித்து மீண்டும் தடுப்பணையை கட்ட வலியுறுத்தி வரும் ஆக.13-ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக சிதம்பரம் மற்றும் புவனகிரி வர்த்தகர் சங்கத்தினர் நேற்று கூட்டாக அறிவித்தனர்.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பநிலை குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று (05/08/2024) கடலூர் 33 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 33 டிகிரி செல்சியஸ், புவனகிரி 33 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 33 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 34 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 34 டிகிரி செல்சியஸ், பண்ருட்டி 34 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலை பதிவாகியுள்ளன.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கலெக்டர் முன்னிலையில் நாளை காலை 10 மணியளவில் சிதம்பரம் பேருந்து நிலையத்தில், புதிய மகளிர் விடியல் பயண நகர பேருந்துகள் மற்றும் புதிய நகர்ப்புற பேருந்துகளையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்க உள்ளார். தொடர்ந்து சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் தொடர்பாக அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் உதவி ஆய்வாளர் முருகன், சிதம்பரம் உதவி ஆய்வாளர் பரணிதரன், விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் அசோகன், சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சகோதரி பானுமதி நினைவேந்தல் நிகழ்ச்சி அங்கனூரில் இன்று நடைபெற்றது. இதில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டார். உடன் கடலூர் மாநகர செயலாளர் செந்தில், கடலூர் நகர செயலாளர் செங்கதிர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
மஞ்சக்குப்பத்தில் அமைந்துள்ள கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில், எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற்று வரும் கைதி, மருத்துவமனையில் தனது மனைவியுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவிட்டுள்ளார்.
குறிஞ்சிப்பாடி அடுத்த பள்ளிநீர்ஓடை கிராமத்தில், அரசு ஆரம்பப் பள்ளியில் சுமார் 24 லட்சம் மதிப்பீட்டில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தை இன்று, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கடலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று கடலூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று மற்றும் நாளை இடை இடையே 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வரைவு காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற காவலில் இருந்த கைதிக்கு முறையாக பாதுகாப்பு வழங்காத காரணத்தால் கடலூர் மாவட்ட காவலர்கள் வேல்முருகன், சாந்தகுமார், கவியரசன் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கைதி சூர்யா, தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடி அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.