India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் செல்வநாயகம் (49). இவர் கடந்த 2022 முதல் 2025 வரையான காலத்தில் தீபாவளி மற்றும் தங்க நாணயம் சிறுசேமிப்பு திட்டம், மாதாந்திர ஏலச்சீட்டு மற்றும் பிற சேமிப்பு திட்டங்கள் நடத்தி சுமார் 800 க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூ.3 கோடிக்கு மேல், பணத்தையும் கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். இது குறித்து கடலூர் மாவட்ட குற்றபிரிவு போலீசார் வழக்குப்பதிந்து செல்வநாயகத்தை கைது செய்தனர்.

சிதம்பரத்தில் உள்ள தில்லைக்காளி சிவபெருமானுடன் போட்டி போட்டு ஆடிய காளிதேவி. சிவனுக்கும் அம்பாளுக்கும் நடனத்தில் போட்டி நிகழ்ந்தது. சிவன் வலதுகையைச் சுழற்றி ஆட, அம்பாளும் அவ்விதமே ஆடினாள். அவர் இடது காலைச் சுழற்றி ஆட, அவளும் அதேபோல் ஆடினாள். ஆனால் அம்பாள் போட்டியில் தோல்வி அடைந்து தில்லைகாளி என்ற பெயரோடு கோபத்துடன் கோயில் கொண்டாள். தில்லைக்காளி அருள் பெற SHARE பண்ணுங்க..

திட்டக்குடி அடுத்த சாத்தநத்தத்தைச் சேர்ந்த தமிழரசன் (22), என்பவர் 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ளும்படி மிரட்டியும், கடந்த 27ஆம் தேதி பஸ்சில் சென்ற போது, அருகில் அமர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இந்நிலையில் புகார் வந்ததையடுத்து, திட்டக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, திருப்பூரில் தலைமறைவாக இருந்த தமிழரசனை போக்சோவில் செய்துள்ளனர்.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம், சின்னவடவாடி ஊராட்சியில் நேற்று (29.03.2025) நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சிறப்புப் பார்வையாளராக கலந்து கொண்டார். இதில் பொது மக்கள் பல்வேறு கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்தனர். கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

சிதம்பரத்தில் உள்ள கல்யாண வீரபத்திரர் கோயிலில் அமாவாசை அன்று சிறப்பு திருமண தடை நீங்க பிரார்த்தனை செய்யப்படுகிறது. இருபாலாரும் பரிகாரம் செய்ய வேண்டிய பொருட்களை கொண்டு வந்து அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டினால் நிச்சயம் விரைவாக திருமணம் நடைபெறும். இந்த கோயிலுக்கு சென்றுள்ளீர்கள் என்றால் கமெண்ட் பண்ணுங்க.. திருமணம் ஆகாதவர்களுக்கு SHARE பண்ணுங்க..

கடலூர் மாவட்டம், சி.முட்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. சுமார் 100 நிறுவனங்களுக்கும் மேல் பங்குபெறும் இந்த முகாமில் 10,000 பணி வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது. விவரங்களுக்கு 6379410073 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பயனுள்ளவர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்..

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று (29.3.2025) காலை 11.30 மணி அளவில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பார்வையாளராக கலந்து கொள்ள உள்ளார். அதனால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கிராம சபை கூட்டத்தில் அளித்து பயன்பெறலாம். ஊர் மக்களுக்கு ஷேர் பண்ணுங்க..

சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் பகுதியில் உள்ள குட்டியாண்டவர் கோயில் “பேஸ்பரங்கி” என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்ட ஒரு கோயிலாகும். இந்த ஆலயத்தின் கருவறையில் சிலை கிடையாது. 3 ஆணிகள் மட்டுமே மூலவராக உள்ளது. அதற்கே வழிபாடு நடைபெறுகிறது. இவ்வாலயத்தில் மாதந்தோறும் பவுர்ணமி அன்று கிரிவலம் நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் சுதை சிற்பங்கள் மிகச் சிறப்பு வாய்ந்தது. ஒருமுறை சென்று வாருங்கள். SHARE பண்ணுங்க..

கடலூர் மாவட்டத்தில் தற்போது யூரியா 6,046 மெட்ரிக் டன், டி.ஏ.பி 1,406 மெட்ரிக் டன், பொட்டாஷ் 2,833 மெட்ரிக் டன்னும், காம்பளக்ஸ் உரம் 7,594 மெட்ரிக் டன்னும், சூப்பர் பாஸ்பேட் 1,237 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 19,116 மெட்ரிக் டன் உரம் இருப்பு உள்ளது. மேலும் பருப்பு வகை 55,401 மெட்ரிக் டன், நெல் விதை 1,88,214 மெட்ரிக் டன்னும் இருப்பு உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

மயிலாடுதுறையிலிருந்து 13 கி.மீ தொலைவில் திருக்குரக்காவல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குண்டலகர்ணேஸ்வரர் கோயிலில் ருத்ராட்ச மாலை அணிந்து சிவபக்த ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். சிவஅபராதம் நீங்க ஆஞ்சநேயர் இத்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம். தொழில் அபிவிருத்தி ஸ்தலமாக விளங்கும் இங்கு அமாவாசை தினங்களில் ஆஞ்சநேயருக்கு ஹோம பூஜைகள் நடைபெறுகிறது! உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்
Sorry, no posts matched your criteria.