Cuddalore

News April 1, 2025

 இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 1) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளன.

News April 1, 2025

அங்கன்வாடி ஆசிரியராக இலவச பயிற்சி!

image

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை <>இங்கு க்ளிக்<<>> செய்து அறியலாம். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்…

News April 1, 2025

கடலூர்: 25 வட்டாட்சியர்கள் இடமாற்றம் – ஆட்சியர் அதிரடி!

image

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 25 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். இதில் கடலூர் வட்டாட்சியராக மகேஷ், பண்ருட்டி வட்டாட்சியராக பிரகாஷ், சிதம்பரம் வட்டாட்சியராக கீதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

News April 1, 2025

கடலூரில் உங்க வீட்டு குட்டீஸ்க்கு செம ட்ரீட் கொடுக்க தயாரா?

image

விடுமுறை தொடங்கிய நிலையில் மக்கள் பல்வேறு இடங்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். அதன்படி தற்போது கடலூரில் மட்டும் இருக்கும் சூப்பர் பிளேஸ் (பொழுதுபோக்கு இடங்கள்) 1.சில்வர் பீச், 2.பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள், 3.செயிண்ட் டேவிட் கோட்டை, 4.கார்டன் ஹவுஸ், 5.வீராணம் ஏரி போன்ற இடங்கள் கடலூர் மாவட்டத்தில் இருக்கிறது. குட்டிஸ்க்கு, குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க அனைவருக்கும் Share பண்ணுங்க.

News April 1, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்

image

சிதம்பரத்தில் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.முருகேசன் வயது மூப்பு காரணமாக நேற்று மதியம் 3:10 மணியளவில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் உடலுக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் தாய்க் கழகமான திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 

News March 31, 2025

கடலூர் மாவட்டத்தில் தமிழகத்தின் முதல் ஏரி 

image

தமிழகத்தின் முதல் ஏரி வீராணம் ஏரி ஆகும், இது கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி சோழர் காலத்தில் கி.பி. 907 முதல் 953 வரை வெட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடி (1.46Tmc) ஆகும். கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக இந்த ஏரி திகழ்கிறது. இந்த செய்தியை தெரியாதவர்களுக்கு பகிரவும். 

News March 31, 2025

கடலூர்: பிரம்மாண்ட புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவு

image

கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் புத்தகத் திருவிழாவை கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கணேசன் மற்றும் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்தனர். இந்நிலையில் கடந்த 9 நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிட்ட புத்தகத் திருவிழா இன்றுடன் (31ம் தேதி) நிறைவடைகிறது.

News March 31, 2025

கள்ள நோட்டு விவகாரம்: கட்சியில் இருந்து விசிக நிர்வாகி நீக்கம்

image

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அதர்நத்தம் கிராம பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வம் என்பவரது விவசாய நிலத்தில் கள்ள நோட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில், கட்சியினர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து செல்வம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News March 31, 2025

கடலூர் மக்களே ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

கடலூர் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)

News March 30, 2025

கடலூர் மாவட்டத்தில் ரோந்து பணி செல்லும் அதிகாரிகள் முழு விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினந்தோறும் ரோந்து பணி மேற்கொள்ள பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (30ஆம்தேதி) கடலூரில் உதவி ஆய்வாளர் கணபதி, விருத்தாசலத்தில் உதவி ஆய்வாளர் ஜெயந்தி, சேத்தியா தோப்பில் உதவி ஆய்வாளர் கிருஷ்ணராஜ், பண்ருட்டியில் காவல் ஆய்வாளர் பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் பாரதி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள ‌உள்ளனர். அவர்களின் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!