India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்களுக்கு மண்டல மற்றும் மாநில அளவில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 27 விளையாட்டுகள் நடத்தபடுகிறது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளோர் http://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும் என கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதை கமென்டில் தெரிவிக்கவும்
வடக்குத்து துணை மின் நிலையத்தில் நாளை 8 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வடலூர் வடக்குத்து, அரசு பண்ணைக்கழகம் , கீழூர், ஆபத்தாரணபுரம், சேராக்குப்பம், காமராஜ் நகர், பி. டி. ஆர். நகர், ஏ-பிளாக் மாற்று குடியிருப்பு, செடுத்தான்குப்பம் , நண்டுகுழி , வடக்கு மேலூர், அன்னதானம்பேட்டை, பாச்சாரப்பாளையம் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.
காட்டுமன்னார்குடி அருகே முட்டம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான எம் ஆர் கே பன்னீர்செல்வம் தமது வீட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், மங்களூர், நெய்வேலியில் அரசு ஐ.டி.ஐக்கள் செயல்படுகின்றன. இங்கு காலியாக உள்ள இடங்களுக்கு மாணவர்களின் நேரடி சேர்க்கை வரும் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் நேற்று அறிவித்துள்ளார். இந்த தகவலை ஷேர் செய்யவும்.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை குறைந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் நேற்று கடலூர் 35 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 34 டிகிரி செல்சியஸ், புவனகிரி 34 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 34 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 36 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 36 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 36 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (06/08/2024) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் இராஜாராம், சிதம்பரம் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சிவராமன், நெய்வேலி உதவி ஆய்வாளர் இளவரசி, சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் வாசுதேவன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
சிதம்பரம் நகராட்சி பகுதியில், கூட்டுக் குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை இன்று காலை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மி ராணி மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் , கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர மற்றும் ஆன்லைன் கல்வி மையத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனை கடலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபு விண்ணப்ப கடலூர் மையத்தில் படிவங்கள் வழங்கி துவக்கி வைத்தார். கூடுதல் விவரங்களுக்கு 04142293077 அல்லது 9443786131 இந்த தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT NOW!
Sorry, no posts matched your criteria.