Cuddalore

News March 6, 2026

தந்தை இறந்த துக்கத்திலும் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்!

image

பண்ருட்டி பணிக்கன் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(52). மூங்கில் படல் செய்யும் கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது ஒரே மகன் சுசீந்திரன் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தந்தை இறந்த துக்கத்திலும் நேற்று பொதுத்தேர்வு எழுதினார்.

News March 6, 2026

கடலூர்: வழிப்பறியில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது

image

கடலூர், இந்திரா நகரை சேர்ந்தவர் முரளி(53). வாகன ஓட்டுனராக உள்ள இவர், கடந்த மார்.3ஆம் தேதி மது வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பின் தொடர்ந்து பைக்கில் வந்த 3 பேர், அவரை சரமாரியாக தாக்கி விட்டு பணம், செல்போன், மது பாட்டிலை பறித்து தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி போலீசார் சந்துரு(21), ஜானகிராமன்(24) இருவரை நேற்று கைது செய்து, ஆதித்தின் என்பவரை தேடி வருகின்றனர்.

News March 6, 2026

கடலூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விபரம்

image

கடலூர், காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (மார்.4) இரவு 10 மணி முதல் நாளை (மார்.5) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 5, 2026

கடலூர்: திருநள்ளாறுக்கு சிறப்பு ரயில் இயக்கம்

image

திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதனால் விழுப்புரத்தில் இருந்து பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுகம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம் வழியாக திருநள்ளாறுக்கு நாளையும் (6.3.2026), நாளை மறுநாளும் (7.3.2026) முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் இயக்கப்படுகிறது என திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 5, 2026

கடலூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

1.கடலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04142-212660
2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3.Toll Free: 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை SHARE பண்ணுங்

News March 5, 2026

கடலூர்: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

image

கடலூர் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். இங்கே கிளிக் செய்து, சஞ்சார் சாத்தி என்ற <>இணையதளத்திற்கு <<>>செல்லவும். பின் அதில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு எளிதாக Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-ஐ டிரேஸ் செய்து, Easy-ஆக கண்டுபிடிக்கலாம். SHARE பண்ணுங்க!

News March 5, 2026

கடலூர்: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

image

மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள Assistant Commandants பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 349
3. வயது: 20 – 25
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,25,100
5. கல்வித்தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 12.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 5, 2026

கடலூர்: மெடிக்கலில் மாத்திரை வாங்குவோர் கவனத்திற்கு!

image

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

News March 5, 2026

கடலூர்: தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு

image

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக அகில இந்திய சித்த வைத்திய சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன் முன்னிலையில் நேற்று (மார்ச் 4) நேரில் சந்தித்த சங்க நிர்வாகிகள் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்தனர்.

News March 5, 2026

கடலூர்: பள்ளி மாணவன் பரிதாப பலி

image

விருத்தாசலம் அடுத்த பூதாம்பூரை சேர்ந்தவர் வீராசாமி மகன் பரத் (17). இவர் நல்லூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று மதியம் பரத் வேப்பூர்-விருத்தாசலம் சாலையில் பைக்கில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் மீது நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் படுகாயமடைந்த பரத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!