India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆகஸ்ட் 15-ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளிலும் சுதந்திர தினம் அன்று கிராம சபை கூட்டம் காலை 11 மணியளவில் நடைபெறும். இதில் கிராம மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் இடம், நேரத்தை மக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பநிலை குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று (08/08/2024) கடலூர் 34 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 33 டிகிரி செல்சியஸ், புவனகிரி 33 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 33 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 34 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 34 டிகிரி செல்சியஸ், பண்ருட்டி 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் கல்லூரியில் நாளை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் இத்திட்டத்தை துவக்கி வைத்து மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டைகள் வழங்க உள்ளனர்.
கடலுார் மாவட்டத்தில், மாதந்தோறும் நடத்தப்படும் பொதுவிநியோகத்திட்ட குறைதீர் முகாம் 10.8.2024 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி, திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய தாலுகா அலுவலகங்களில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 34 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில், அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி வருகிற 21ஆம் தேதியும், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி வருகிற 22ஆம் தேதியும், மாவட்டத்தில் உள்ள கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடைபெறவுள்ளது. மேலும், வெற்றியாளர்களுக்கு பரிசு தொகைகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று கடலூர் 33 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 33 டிகிரி செல்சியஸ், புவனகிரி 33 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 33 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 34 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 34 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 35 டிகிரி செல்சியஸ், பண்ருட்டி 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
திருவள்ளூரை சேர்ந்த நேதாஜி(22) சென்னையில் உள்ள ஜவுளிகடையில் வேலை பார்த்தபோது செல்போன் மூலம் கடலூரை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் கடந்த 1.6.2016 அன்று கடலூர் வந்த நேதாஜி சிறுமியை பலாத்காரம் செய்தார். இதுகுறித்து கடலூர் போலீசார் வழக்குபதிந்து நேதாஜியை கைது செய்தனர். இவ்வழக்கில் இன்று, கடலூர் போக்சோ நீதிபதி லட்சுமி, நேதாஜிக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி லக்கூர் 3 சென்டி மீட்டர், கீழ்ச்செருவாய் 3 சென்டி மீட்டர், வேப்பூர் 3 சென்டி மீட்டர், விருத்தாசலம் 2 சென்டி மீட்டர், தொழுதூர் 1 சென்டி மீட்டர், பண்ருட்டி 1 சென்டி மீட்டர், குப்பநத்தம் 1 சென்டி மீட்டர், ஶ்ரீ முஷ்ணம் 1 சென்டி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் உதவி ஆய்வாளர் கவியரசன், சிதம்பரம் உதவி ஆய்வாளர் சங்கர், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சந்துரு, நெய்வேலி உதவி ஆய்வாளர் ஜெரினா, சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் சந்திரா ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.