India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தநாளை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சியின் பொதுக்கூட்டம், கடலூர் மாவட்டம், திட்டக்குடி தொகுதியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் இன்று கள ஆய்வு செய்யப்பட்டு காவல் துறை அனுமதி பெறப்பட்டது. இதில் கடலூர் மாவட்ட தலைவர் ஞானராஜ், மாவட்ட செயலாளர் ரமேஷ் மற்றும் திட்டக்குடி தொகுதி பொறுப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் சுதந்திர தினமான 15ஆம் தேதி காலை 11 மணியளவில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், தூய்மையான குடிநீர் விநியோகம், இணைய வழி வரி செலுத்தும் சேவை உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று, 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 40 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவருமான திருமாவளவன் இன்று அறிவிப்பு விடுத்துள்ளார். அந்த அறிவிப்பில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மதுபோதை ஒழிப்பு மகளீர் மாநாடு நடைபெறும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, கடலூர் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி, பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கான மாபெரும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நெல்லிக்குப்பம் பகுதியில் கடந்த 3 நாளாக நடைபெற்று வந்தது. இறுதி நாளான இன்று விழுப்புரம் தளபதி சிசி அணியினரும் பண்ருட்டி அணியினரும் மோதினர். இதில் வெற்றி பெற்ற விழுப்புரம் அணிக்கு அமைச்சர் கணேசன் இன்று கோப்பை வழங்கினார்.
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று கடலூர் காவல் ஆய்வாளர் இராஜாராம், சிதம்பரம் காவல் ஆய்வாளர் கலையரசன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் இராமலிங்கம், நெய்வேலி காவல் ஆய்வாளர் உதயகுமார், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் வீரசேகரன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவருமான திருமாவளவன் இன்று அறிவிப்பு விடுத்துள்ளார். அந்த அறிவிப்பில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மதுபோதை ஒழிப்பு மகளீர் மாநாடு நடைபெறும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் அறிவித்துள்ளார்.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுடன் வரும் நபர்கள் தங்குவதற்காக, மருத்துவமனை வளாகத்தில் தங்கும் விடுதி, நாள் ஒன்றுக்கு ரூ.10க்கு வழங்கப்படுகிறது. இதில் தங்குவதற்கு, நோயாளியுடன் தங்குபவரின் ஆதார் உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை நகல், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவரின் ஓ.பி சீட்டு நகலை சமர்ப்பிக்க வேண்டுமென மருத்துவமனை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
திருச்சி-அஹமதாபாத் விரைவு ரயில் ஆகஸ்ட் 18 வரை சிதம்பரம், கடலூர் துறைமுகத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், டிசம்பர் 29 வரை நீட்டிக்கபட்டுள்ளது. அதன்படி திருச்சியில் காலை 5.40 மணிக்கு புறப்பட்டு கடலூருக்கு 9.32 மணிக்கு வந்தடையும். மறுமார்க்கத்தில் அஹமதாபாத்திலிருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு கடலூருக்கு மறுநாள் காலை 9.30 மணிக்கு வந்து செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் இன்றைய காலை நிலவரப்படி பண்ருட்டியில் 73 மில்லி மீட்டர் மழையும், வானமாதேவியில் 25.4 மில்லி மீட்டர், கடலூரில் 11.2 மில்லி மீட்டர், எஸ்.ஆர்.சி. குடிதாங்கியில் 9 மில்லி மீட்டரும், வடகுத்தில் 2 மில்லி மீட்டரும், சிதம்பரத்தில் 1 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
Sorry, no posts matched your criteria.