Cuddalore

News March 8, 2026

பிறப்பு சான்றிதழ் பெற கால அவகாசம் நீட்டிப்பு – கலெக்டர்

image

இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரையின்படி 1.1.2000-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும், 1.1.2000 பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும், குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 26.09.2026 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள அலுவலகங்களில் உரிய சான்றுடன் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சிபி ஆதித்திய செந்தில்குமார் தெரிவிதுள்ளார்.

News March 8, 2026

கடலூர்: மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

image

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 20,369 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க எதுவாக சாய்தளம், சக்கர நாற்காலிகளுடன் தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News March 8, 2026

கடலூர்: PHONE-ல் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2 .அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி – 1098
5. முதியோருக்கான அவசர உதவி -1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி – 1033
7. பெண்கள் பாதுகாப்பு – 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News March 8, 2026

கடலூர்: அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

image

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே சித்தேரியில் புவனகிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருண்மொழிதேவன் முன்னிலையில், நேற்று (மார்ச் 7) மாற்றுக்கட்சியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு எம்எல்ஏ சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில், அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க!

News March 8, 2026

கடலூர்: பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 1 ஊக்கத்தொகை

image

கடலூர் மாவட்டத்தில் 264 தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினமும் 50,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தினால் பால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடுகட்டும் வகையில் 3 மாத காலத்திற்கு மட்டும் லிட்டருக்கு ரூ.1 ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE

News March 8, 2026

கடலூர்: ரூ.1.11 கோடி மோசடி – குற்றவாளி கைது

image

களையூர் பகுதியை சேர்ந்த ரஞ்சனி (36) என்பவரிடம் தட்டாஞ்சாவடியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பணம் கொடுத்தால் அதனை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, ரூ.36 லட்சம் பெற்று ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பலரிடம் ரூ.1.11 பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். SHARE பண்ணுங்க!

News March 8, 2026

கடலூர்: சாலையில் கிடந்த அடையாளம் தெரியாத சடலம்

image

கடலூர் முதுநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஊர் பெயர் தெரியாத சுமார் (70) வயது மதிக்கத்தக்க முதியவர். கடந்த மார்ச் 5ஆம் தேதி, பூண்டியாங்குப்பம் நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் இறந்து விட்டார். இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் முதுநகர் காவல் நிலையத்திற்கு 9944661847, 9498100555 என்ற செல்பேசி எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு, இன்று முதுநகர் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

News March 7, 2026

கடலூர்: சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் – எஸ்.பி

image

கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு, சட்ட அலுவல் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஆலோசனை வழங்க சட்ட ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். சட்டப் பட்டப்படிப்பு முடித்து, பார் கவுன்சிலில் பதிவு செய்து, 5 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் வரும் மார்ச் 20-க்குள் கடலூர் எஸ்.பி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

News March 7, 2026

கடலூர் மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

கடலூர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த<> லிங்கை <<>>க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 7, 2026

கடலூர்: 258 தேர்தல் மண்டல அலுவலர்கள் நியமனம்

image

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலினை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மண்டல தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி 2,590 வாக்குச் சாவடி மையங்களுக்கு 33 இருப்பு அலுவலர்கள் உட்பட 258 மண்டல தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!