Coimbatore

News March 4, 2025

கோனியம்மன் கோவில் தேரோட்டம்: தயார் நிலையில் தேர்

image

கோவையின் காவல் தெய்வம் கோனியம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், ராஜ வீதியில் தேரை தயார்படுத்தும் இறுதி கட்ட பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சாலை ஓரங்களில் இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டப்படுகின்றன. ஆங்காங்கே பொதுமக்கள் சார்பில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், காவல்துறையினரும் தீவிர பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

News March 4, 2025

ஆதாரில் திருத்தம் செய்ய டோக்கன்கள் விநியோகம் 

image

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய மற்றும் புதுப்பிப்பதற்காக பொதுமக்கள் தினந்தோறும் பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்திற்கு வருகை தந்து வருகின்றனர். இந்நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க அதற்கான டோக்கன்கள் தினமும் காலை 8 மணிக்கு வழங்கப்படும் எனவும், டோக்கன் பெற விரும்பும் நபர்கள் தங்களது ஆதார் அட்டையுடன் நேரில் வந்து டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

News March 4, 2025

கோவை: பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை

image

கோனியம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 05 அன்று கோயிலை சுற்றி உள்ள பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை என கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்தார். 11ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நாளை (05.03.2025) காலை வழக்கம்போல் நடைபெறும் என்றும் மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் தெரிவித்துள்ளார்.

News March 4, 2025

கிரிக்கெட் வீரர் பாலியல் டார்ச்சர் – இளம்பெண் பரபரப்பு புகார்

image

கோவையை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்தார். அதில், “எனக்கும், கோவை டிஎன்பிஎல் கிரிக்கெட் வீரருக்கும் திருமணம் நடந்தது. கணவர் மது போதையில் தாய் வீட்டிற்கு சென்று பணம், நகை வாங்கி வர கூறி என்னை கிரிக்கெட் பேட்டால் அடித்தார்.என் கணவரும், அவர் தாயும் என்னை உடல், மன ரீதியாக துன்புறுத்தி வருகிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுள்ளார்.

News March 4, 2025

பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடக்கம் – 336 மாணவர்கள் பங்கேற்கவில்லை

image

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்.3 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் மொழிப்பாட தோ்வை 34,958 போ் எழுதினா். 336 மாணவ, மாணவிகள் தோ்வில் பங்கேற்கவில்லை. அதேபோல் தனித்தோ்வர்களில் 34 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தமிழ் பாட தோ்வு எளிதாக இருந்ததாகவும், அதிக மதிப்பெண்கள் பெறக்கூடிய வகையில் வினாத்தாள் அமைந்திருந்ததாகவும் மாணவா்கள் கூறினா்.

News March 4, 2025

IOB வங்கியில் வேலை: டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (Indian Overseas Bank) 750 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மார்ச்.09க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஊக்கத்தொகையாக ரூ.15,000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக் <<>>செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News March 4, 2025

கோவை விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு 

image

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்க, தரவுகள் பதிவேற்றம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகின்றன. வரும், 31ம் தேதிக்குள் விவசாயிகள் தங்களது ஆதார் எண், பட்டா விபரம் ஆகியவற்றுடன் சென்று அந்தந்த ஊர்களில் நடக்கும் முகாமில் பதிவு செய்து கொள்ளலாம் (அ) அருகில் உள்ள அரசு பொது இ-சேவை மையத்திலும் கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம் என கோவை வேளாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News March 4, 2025

பியூட்டி பார்லரில் விபச்சாரம் – புரோக்கர் கைது

image

கோவை சேரன் மாநகர் அடுத்த பாலாஜி நகரில் உள்ள ஒரு காம்பளக்ஸில் அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக பீளமேடு போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடந்ததை உறுதி செய்தனர். இதனையடுத்து அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த 43 வயது பெண் புரோக்கரை கைது செய்தனர். மேலும், ஒருவரை தேடி வருகின்றனர்.

News March 4, 2025

கலெக்டர் அதிரடி நடவடிக்கை 

image

கோவை கலெக்டர் பவன் குமார் இன்று சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளி பொதுத்தேர்வு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர் நெல்லித்துறை ஊராட்சிக்கு கடம்பன் கோம்பை மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை தோளில் தூக்கி சென்ற சம்பவம் குறித்து கோட்டாச்சியர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் 2, 3 மாதங்களில் அனைத்து பணிகளும் செய்து முடிக்கப்படும் என்றார்.

News March 4, 2025

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாவர்கள் விபரம்

image

கோவை மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வில் மொத்த 35,294 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் இன்று 34,958 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மேலும், 336 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. அதேபோல மொத்தம் 649 மாணவர்கள் தனித்தேர்வர்கள் எழுதினார்கள். அதில் இன்று 615 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள். இதில் 34 தேர்வு எழுதவில்லை என என கோவை மாவட்ட பள்ளிகல்வித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!