Coimbatore

News April 12, 2025

கோவை: 5 முகம், 8 கரங்கள் கொண்ட முருகன் கோயில்!

image

கோவை: அன்னூர் அருகே இரும்பொறையிலிருந்து 4 கி.மீ தொலைவில் ஓதிமலை முருகன் கோயில் உள்ளது. இக்கோயில் பழநி மலையை விடவும் பழமையானதாகும். ஓதிமலை முருகன் 5 தலையுடனும் 8 கைகளுடனும் காட்சி தருகிறார். பொதுவாக, அனைத்துக் கோயில்களிலும் மூலவர் சிலை பீடத்தின் மீதே நிறுவப்பட்டிருக்கும். ஆனால், இக்கோயில் மூலவர் முருகன் சிலை பாறையின் மீது நிறுவப்பட்டிருருப்பது விசேஷம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!

News April 12, 2025

கோவை: கால சம்ஹாரீஸ்வர பைரவர் கோயில்

image

கோவை, ஆலாந்துறை, நாதேகவுண்டன்புதூரில், கால சம்ஹாரீஸ்வர பைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது. 8 வாகனங்களில் 8 வகையான கால பைரவர்கள், சம்ஹார பைரவர்களாக இங்கு வீற்றிருக்கின்றனர். சக்திவாய்ந்த கால பைரவரை, அஷ்டமி நாட்களில், 11 தீபங்கள் ஏற்றி, வணங்கி வந்தால், கடன், வறுமை உள்ளிட்ட பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News April 12, 2025

வெள்ளிங்கிரியில் மூச்சு திணறி ஒருவர் உயிரிழப்பு

image

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை வெள்ளியங்கிரி மலையேறும் போது காஞ்சிபுரத்தை சேர்ந்த ரமேஷ் (42) மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார். 6 வது மலை அருகே நேற்று அதிகாலை வரும் போது அவர் மயங்கி விழுந்துள்ளார். அவர் உடல் கீழே கொண்டு வரப்பட்டது.

News April 11, 2025

போக்சோவில் சிக்கிய போதகர்: ஜாமின் கேட்டு மனு

image

கோவை சர்ச்சில் பாதிரியாராக பணியாற்றி வந்தவர் ஜான் ஜெபராஜ் (32). இவர் மீது இரு சிறுமிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடைய தலைமறைவான மத போதகரை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்களும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், லுக் அவுட் நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.

News April 11, 2025

சத்துணவு மையத்தில் வேலை

image

கோவை மாவட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 331 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளன. தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு ஓராண்டுக்கு பின் சிறப்பு காலமுறை ஊதியத்தில் ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.28. அசல் சான்றுகளுடன் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 11, 2025

சவுக்கு சங்கர் வழக்குகள் கோவைக்கு மாற்றம்

image

கோவை சைபர் க்ரைம் எஸ்.ஐ சுகன்யா கடந்த​ ஆண்டு அளித்த புகாரில் பெண் காவலர்​கள், உயர​தி​காரி​கள் குறித்து அவதூறாக பேசிய சவுக்கு சங்​கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என கூறி​யிருந்​தார். இதுபோன்று தமிழக முழுவதும் வழக்குகள் பதிவாகின. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென சவுக்கு சங்கர் கோரிக்கையை விடுத்திருந்த நிலையில் கோவை நீதிமன்றத்திற்கு வழக்குகள் மாற்றப்பட்டன.

News April 11, 2025

ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா?

image

கோவை மாவட்டத்தில் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை.

News April 11, 2025

கோவை அருகே விபத்து: 2 பேர் பலி

image

சிறுமுகையை அடுத்த ஆலங்கொம்பு பகுதியில் நேற்று இரவு ஆட்டோ ஒன்று பெண் பயணி ஒருவரை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அதேவேளையில் ஒரே டூவீலரில் 4 இளைஞர்கள் சென்றுள்ளனர். அசுர வேகத்தில் சென்ற டூவீலர் ஆட்டோ மீது மோதியதில், 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இருவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 11, 2025

கோவை அருகே விபத்து: 2 பேர் பலி

image

சிறுமுகையை அடுத்த ஆலங்கொம்பு பகுதியில் நேற்று இரவு ஆட்டோ ஒன்று பெண் பயணி ஒருவரை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அதேவேளையில் ஒரே டூவீலரில் 4 இளைஞர்கள் சென்றுள்ளனர். அசுர வேகத்தில் சென்ற டூவீலர் ஆட்டோ மீது மோதியதில், 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இருவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 10, 2025

அதிமுகவின் முக்கிய நிர்வாகி அக்கட்சியில் இருந்து விலகல்

image

அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளரும், அதிமுகவின் அதிகாரப்பூர் நாளிதழான நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளருமான, இன்ஜினியர் சந்திரசேகர் இன்று தனிப்பட்ட பணி காரணமாக, தன்னை கட்சி பணிகளில் ஈடுபடுத்தி கொள்ள முடியாததால், கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் விலகி கொள்வதாக அறிவித்துள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!