Coimbatore

News March 29, 2024

கோவையில் பிரேமலதா தேர்தல் பிரச்சாரம்

image

கோவை, சிங்காநல்லூர் பகுதியில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கோவை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் அதிமுக ஆட்சி காலத்தில் கோவைக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

News March 29, 2024

தேர்தல் குறித்து புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு

image

கோவை கலெக்டர் கிராந்தி  குமார் பாடி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மக்களவை பொதுத்தேர்தல் தொடர்பான புகார் ஏதும் இருந்தால் 94896-87740, 94862-68740, 94896-81740 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார்.

News March 28, 2024

கோவையில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்

image

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வேட்பு மனு தாக்கல், பரிசீலனை அனைத்தும் முடிவுற்று பிரச்சாரம் களைகட்ட துவங்கி உள்ளது. அந்த வகையில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோவை, நீலகிரியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வரும் ஏப். 29 ஆம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளதாக அக்கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

News March 28, 2024

கோவை: வேட்பு மனு ஏற்பு, நிராகரிப்பு விவரம்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கோவை மக்களவைத் தொகுதியில் 59 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 41 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் 18 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என கோவை மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

News March 28, 2024

கோவை: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சார்பில் மனு 

image

கோவை மாவட்ட தலைமை தேர்தல் அலுவலர் கிராந்தி குமாரிடம் கோவை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க செயலாளர் க.பாலாஜி இன்று மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கோவையில் 108 அவசர ஊர்திகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஜனநாயக கடமையாற்ற முடிவதில்லை. எனவே தபால் ஓட்டுரிமையை எங்களுக்கும் வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 28, 2024

கோவை: கலெக்டர் அறிவுறுத்தல்

image

தேர்தல் நடத்தை விதிமுறை கண்காணிப்பு குழுவினர் சுற்றுலாப் பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளும் போது, பயணச்சீட்டு, ஹோட்டல் ரூம் புக்கிங் விபரங்களை சரிபார்த்த பின்னர், செலவிற்காக தொகை வைத்திருந்தால், முழு தொகையும் பறிமுதல் செய்யக்கூடாது எனவும், கைச்செலவுக்கு ரூ.10,000 யை தவிர்த்து மீதமுள்ள தொகையை பறிமுதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் நேற்று தெரிவித்துள்ளார்.

News March 28, 2024

அண்ணாமலைக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி

image

அண்ணாமலை நேற்று வேட்பு மனுத்தாக்கலுக்கு முன் கோவை கோனியம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு சென்றார். அவர் உள்ளே நுழைந்த போது கோவை புதூரை சேர்ந்த ரவி, தேவிகா ஜோடி திருமணம் முடித்து சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்திருந்தனர். அப்போது, அண்ணாமலையை கண்டதும் தம்பதி ஓடி வந்து அண்ணாமலையின் காலில் விழுந்து வணங்கினர்.  அண்ணாமலை மணமக்களை மனதார வாழ்த்தி ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்.

News March 28, 2024

கனிமொழி நாளை கோவையில் பிரச்சாரம் 

image

கோவை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கனிமொழி எம்.பி. நாளை (29-3-2024) தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி நாளை துடியலூர் சந்தை ஜங்சன், சிங்காநல்லூர் கரும்புக்கடை மைதானம், சூலூர் ஆகிய இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இத்தொகுதியில் அண்ணாமலை(பாஜக), சிங்கை ராமச்சந்திரன்(அதிமுக), கணபதி ராஜ்குமார் களம் காண்பதால் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

News March 28, 2024

திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

image

கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், கோவை யாஸ்மின் நகர், ராமர் கோவில் வீதியில் இன்று (மார்ச்.28) பிரச்சாரத்தில் ஈடுபட்டு உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். உடன் கோவை மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக், மேயர் கல்பனா ஆனந்த் குமார் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் திமுக கழக தொண்டர்கள் இருந்தனர்.

News March 28, 2024

தரமான அரிசி வழங்க கலெக்டர் அறிவுறுத்தல்

image

கோவை மாவட்டத்தில் 1538 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு 11.5 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை மாதந்தோறும் வாங்குகின்றனர். இந்நிலையில் ரேஷன் கடைகள் வழங்கப்பட்ட அரசி தரமில்லை என புகார் எழுந்ததை தொடர்ந்து கோவை, புலியகுளம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் கலெக்டர் கிராந்தி குமார் ஆய்வு செய்தார். அப்போது அரிசி தரமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

error: Content is protected !!