India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை மாவட்டத்தில் இன்று (21.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்று (21.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட நாம் தமிழர்கட்சி வேட்பாளர்களை சீமான் இன்று அறிவித்தார். அதில்,
1) மேட்டுப்பாளையம்- கோபாலகிருஷ்ணன்
2) சூலூர்- ராஜசேகர்
3) கவுண்டம்பாளையம்- கலாமணி ஜெகநாதன்
4) கோவை வடக்கு- நர்மதா
5) தொண்டாமுத்தூர்- ரஜ்புநிஷா அப்துல்கனி
6) கோவை தெற்கு- பேரறிவாளன்
7) சிங்காநல்லூர்- நேருஜி
8) கிணத்துக்கடவு- பானுப்ரியா செந்தில்குமார்
9) பொள்ளாச்சி- செந்தில்
10) வால்பாறை- உமாதேவி பெரியாண்டி

ரூ.25 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, கோவையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.67 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டார். இவரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. விசாரணை முடிந்த நிலையில், நேற்று கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

கோவை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <

கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குப் பிப்ரவரி 1 முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று காலை 5-வது மலையில் ஏறியபோது முதியவர் ஒருவர் திடீர் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். மலையேறும் பக்தர்களுக்கு வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்

கோயம்புத்தூர் மாநகர் டவுன்ஹால் பகுதியில் உள்ள செயின்ட் மைக்கல்ஸ் மேல்நிலை பள்ளி தேர்வு மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுகள் (தொகுதி-II பணிகள்) 22.02.2026 முற்பகல் 09.30 முதல் 12.30 வரை Group-II Main Examination Descriptive Type கோயம்புத்தூர் மாவட்டத்தில் 103 தேர்வர்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

கோவை விமான நிலையத்தில் ‘புதிய உடான் யாத்ரி கபே’ உணவகத்தைத் திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, விமான நிலைய விரிவாக்கத்திற்கு ₹2,136 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ஆகியோர் உடனிருந்த இந்நிகழ்வில், விரிவாக்கப் பணிகள் 2028-ல் நிறைவடைந்து, கோவை விமான நிலையம் உலகத்தரம் வாய்ந்ததாக மாறும் என உறுதிபடத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.