Coimbatore

News May 2, 2024

40 ஆண்டுகளுக்குப் பின்னர் வெயில் அளவு கூடுதல்

image

கோவையில் 104 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகி உள்ளது. இதன்படி, கோவையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெயில் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் துறை தலைவர் சத்யமூர்த்தி இன்று கூறினார். மேலும், ‘நடப்பாண்டில் கால நிலை மாற்றத்தால் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது” என்றும் கூறியுள்ளார்.

News May 2, 2024

தண்ணீரை மாசு படுத்தினால் கடும் தண்டனை

image

கோவையில் பல்வேறு அணைகள் நீர் இல்லாமல் வரண்டுள்ளன. இந்நிலையில், தமிழக மக்கள் ஆனைகட்டி வழியாக வந்து கேரள நீர் நிலைகளை மாசுபடுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சோலையூர் ஊராட்சி நிர்வாகம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழக மக்கள் கேரள நீரை மாசு படுத்தும் பட்சத்தில் 6 மாதம் முதல் 8 மாதம் சிறை தண்டனையும் 10000 முதல் 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. 

News May 2, 2024

யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது – தந்தம் பறிமுதல்.

image

வடவள்ளி பகுதியில் யானைத்தந்தம் விற்பனை நடைபெறுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில், வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் சாய்பாபா காலனி அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் சாய்பாபா காலனியை சேர்ந்த விசாகன், நல்லாம்பாளையத்தை சேர்ந்த பிரிட்டோ என்பதும் தந்தத்தை விற்க முயன்றதும் தெரிந்தது. தொடர்ந்து இருவரை கைது செய்து தந்தத்தை பறிமுதல் செய்தனர்.

News May 2, 2024

கோவை: தபால் வாக்குகள் எண்ண 6 குழுக்கள் தயார்

image

கோவையில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு மட்டும் துணை ஆட்சியர்கள் தலைமையில் 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி, வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளராக ஒரு தாசில்தார், வாக்குகளை எண்ணுவதற்கு உதவியாளராக ஒருவர் என 3 பேர் நியமித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.

News May 2, 2024

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

தொழிலாளர் தினமான நேற்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், “முன் அனுமதி பெறாமல் தொழிலாளர்களை பணிக்கு வரவழைத்த 80 கடைகள், நிறுவனங்கள், 78 உணவு கடைகள், 4 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 162 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 2, 2024

கோவை அருகே தங்கும் விடுதிக்கு சீல்

image

வால்பாறையை குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் ஸ்ரீராம் தேயிலை தோட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த தோட்ட வளாகத்தில் தங்கும் விடுதி கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. விடுதியில் தங்கியிருந்த வால்பாறை கூட்டுறவு காலனியை சோ்ந்த ராம் பிரசாத், ஸ்டேன்மோா் எஸ்டேட்டை சோ்ந்த பிரபு என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. போலீசாரின் விசாரணையில் விடுதி அனுமதியின்றி செயல்படுவது தெரிந்து அதனை நேற்று சீல் வைத்தனர்.

News May 1, 2024

கோவை: கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

image

கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் பபிஷா(18). இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள கேஜிஐஎஸ்எல் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இன்று காதல் பிரச்சனையில் விடுதி கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்துள்ளார். அவரை மீட்ட சக மாணவிகள் சிகிச்சைக்காக கேஜி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 1, 2024

கோவை மக்களுக்காக ஊட்டியில் இருந்து தண்ணீர்

image

கோவை மாநகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அணைகளில் உள்ள சிறுவாணி மற்றும் பில்லூர் அணைகளில் உள்ள நீரளவு குறைந்த அளவில் உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள போர்த்திமந்து அணையில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 20 கோடி லிட்டர் குடிநீரை பெற கோவை மாநகராட்சி தரப்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் அது கிடைக்கும் என்று இன்று மாநகராட்சி ஆணையர் கூறினார்.

News May 1, 2024

கோவை: கண்காணிப்பு கேமரா சரியாக இயங்குகிறதா என ஆய்வு

image

கோவை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. இங்கு 24 மணி நேரமும் துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், இன்று கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் இன்று ஆய்வு செய்தார். அப்போது கண்காணிப்பு கேமராக்கள் முறையாக செயல்படுகிறதா என அங்கிருந்த போலீசாரிடம் கேட்டறிந்தார்.

News May 1, 2024

வீட்டுக் கடனை இன்சூரன்ஸ் நிறுவனமே செலுத்த உத்தரவு.

image

கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனாவால் உயிரிழந்த கோவை ரத்தினபுரியை சேர்ந்த செல்வராஜின் மகன் சுஜேஷ் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடன் அவர் பெற்ற வீட்டுக்கடன் நிலுவைத்தொகையினை செலுத்த கோரியுள்ளார். அதனை நிறுவனம் மறுக்கவே கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகாரளித்தார். இதை விசாரித்த தலைவர் தங்கவேல் கடன் நிலுவை தொகையை இன்சூரன்ஸ் நிறுவனமே செலுத்த வேண்டும் என நேற்று உத்தரவிட்டார்.

error: Content is protected !!