India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் வருகின்ற ஏப்ரல் 12ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூட்டாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். இதற்காக கோவையும் பலத்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா கூட்டணி திமுக வேட்பாளரை ஆதரித்து இருவரும் வாக்கு சேகரிக்க கோவை வருகை தர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் வேட்பாளர்கள் தனியார் கட்டடங்களிலோ அல்லது வாகனங்களிலோ ஸ்டிக்கர் ஒட்டும்போது , அதன் உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று, ஒப்புதல் கடிதம் பெற வேண்டும். அதை 3 நாட்களுக்குள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். மீறினால் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கருதி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் கிராந்தி இன்று தெரிவித்துள்ளார்.
கோவை சிஎஸ்ஐ தேவாலயத்தில் நடைபெற்ற சம்பவத்தில், கைது செய்யபட்ட கிறிஸ்தவ பாதிரியார்கள் இருவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இன்று (ஏப்ரல்.04) சந்திக்க பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூருக்கு இப்ராஹிம் கோவை மத்திய சிறைச்சாலைக்கு வந்தார். மேலும் சிறையில் அவர்களை சந்தித்து இச்சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தலில் விதிமீறல் தொடர்பாக மக்கள் புகார் அளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல ஏற்பாடுகளை செய்துள்ளது.அதன்படி கோவை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், சி விஜில் செயலி மூலமாகவும் புகாரினை தெரிவிக்க இயலும். அதன்படி இதுவரை 157 புகார்கள் வரப்பட்டுள்ளதாகவும்,அதற்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தேர்தலில் விதிமீறல் தொடர்பாக மக்கள் புகார் அளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல ஏற்பாடுகளை செய்துள்ளது.அதன்படி கோவை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், சி விஜில் செயலி மூலமாகவும் புகாரினை தெரிவிக்க இயலும். அதன்படி இதுவரை 157 புகார்கள் வரப்பட்டுள்ளதாகவும்,அதற்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அன்னூரில் நடிகர் செந்தில் பாஜக வேட்பாளர் எல்.முருகனுக்கு (ஏப்ரல். 3) வாக்கு சேகரித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து திரைப்பட நடிகர் செந்தில் அன்னூர் ஒன்றியத்துக்குட்பட்ட கணேசபுரம், கணுவக்கரை பகுதிகளில் வாக்கு சேகரித்தார். இதில் வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, செயலாளர் ஜெயபால், ஒன்றிய தலைவர்கள் திருமூர்த்தி ரத்தினசாமி கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது.இந்த நிலையில் இன்று (ஏப்.03) தமிழகத்தின் 13 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தியுள்ளது . இதில் அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் 101 டிகிரி வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் தொடர்பான புகார்கள் இருந்தால் அதனைத் தெரிவிக்க மாநில தேர்தல் செலவின பார்வையாளரின் தொடர்பு எண் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட நிர்வாகம் இன்று (ஏப்.03) வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத் தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின் மாநில தேர்தல் செலவின பார்வையாளரை அலைபேசி எண் 9345298218 என்ற எண்ணின் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்ப்பட்டது.
கோயமுத்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள்/வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கான தேர்தல் செலவினப் பார்வையாளர்களின் ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் (05.04.2024, 10.04.2024, 16.04.2024) ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க கோவை தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்தி குமார் பாடி இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.