India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாரதியார் பல்கலைக்கழகத் துறைகளில் நடத்தப்பட்டு வரும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் 2024-2025- கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு உள்ளது. தகுதியுடைய மாணவர்கள் மேற்கண்ட பாடப்பிரிவுகளில் சேருவதற்கான விண்ணப்பத்தை கல்லூரி இணையத்தளத்தில் 06.05.2024 முதல் 06.06.2024 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் இன்று கூறியுள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று (மே.04) இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டால் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தனியார் நிறுவனங்கள் மூலம் நடைபெறும் குடிநீர் விற்பனை அதிகரித்து வருகிறது.
கோவை மாநகரில் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு, நீக்கி தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநகர ஆணையரிடம் மனு அளித்தனர்.
கோவை வேளாண் கல்லூரியில் வரும் மே.6, ஜூன்.1 உள்ளிட்ட தேதிகளில் 7 – 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கணினி திறன்களை கற்க கோடைக்கால சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி அரைநாள், முழு நாள் அளவில் நடத்தப்பட உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 97899-82772, 94420-78081 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என வேளாண் பல்கலை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்து அழைத்து வரும் வழியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் காவல் துறை வாகனம் மீது கார் மோதியது. இதில் காவலர்கள் மற்றும் சவுக்கு சங்கர் என அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் இன்று கூறினர்.
சித்தநாயக்கன்பாளையத்தில் நேற்று பொதுக் குழாயில் குடிநீர் பிடித்த பொதுமக்களை திமுகவினர் தாக்கினர். சித்தநாயக்கன்பாளையத்தில்
பொதுக்குழாயில் பொதுமக்கள் குடிநீர் பிடிப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது திமுகவைச் சேர்ந்த ஒரு சிலர் வரிசையில் நிற்காமல் பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கே நின்று கொண்டிருந்த பொது மக்களையும் தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான கோஜு ரியூ தேசிய அளவிலான கராத்தே சாம்பியன் ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழகத்தில் இருந்து 95 பேர் கலந்து கொண்டு வெற்றிபெற்றனர். அவர்கள் மும்பையில் இருந்து ரயில் மூலம் கோவை ரயில்வே நிலையம் இன்று வந்தடைந்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு இன்று அளிக்கப்பட்டது.
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, வேளாண் பொறியியல் கல்லூரியில் மே.6 ஆம் தேதி முதல் ஜூன்.1 ஆம் தேதிகளில் 7 -18 வயதிற்குட்பட்டோருக்கான கணினித் திறன்களை கற்க கோடைக்கால பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் குழந்தைகள் தங்கள் கணினித் திறனை வெளிப்படுத்த உதவியாக இருக்கும். பயிற்சிகள் அரை நாள் நடத்தப்படும் என இன்று வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கூறினார்.
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனம் மூலம் ஒரு ரூபாய்க்கு மோர் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும். மே, ஜூன் மாதங்களில் 300 யூனிட் இலவச மின்சாரத்தை தமிழக அரசு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கோவையை சேர்ந்த சுதாகர் என்பவர் பெங்களூரில் பணிபுரிந்து வருகிறார். மனைவி, இரு குழந்தைகள் கோவை சிங்காநல்லூரில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், சுதாகரின் மனைவி நேற்று அப்பகுதியில் உள்ள பிரபல கேஎஃப்சி உணவகத்தில் 4 சிக்கன் வகைகளை ஜொமேட்டோ மூலம் ஆர்டர் செய்து வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்த போது ஸ்டீல் கம்பி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஜொமேட்டோ நிறுவனத்திற்கு புகார் அளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.