India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்த ராமச்சந்திரன்(29) என்பவரை முன் விரோதம் காரணமாக கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த திலீப் (19) மற்றும் கௌரிசங்கர் (21) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவர் மீதும் இன்று (ஏப்ரல்.05) கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
சென்னை அடையார் பகுதியை சேர்ந்த வரலட்சுமி, அவருடைய மகன் யுவராஜ், மகள் ஜனனி உள்ளிட்ட மூவரும் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு நேற்று போத்தனூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். பின், மூவரும் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர். அப்போது, வெங்கிட்டாபுரம் அருகே வந்த போது மூவரும் அந்த வழியாக வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் பறக்கும் படையினரின் சோதனையில் இதுவரை 257 பேரிடம் இருந்து ரூ.7,66,93,404 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை சமர்ப்பித்த 156 பேருக்கு ரூ.2,16,87,170 திருப்பி அளிக்கப்பட்டது. மீதமுள்ள தொகை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்.19 அன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், 40 சதவீதத்திற்கும் மேல் பாதிப்புடைய மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கு பதிவு செய்வதை தவிர்க்கும் விதமாக தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ள முதியோர், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்.5) துவங்குகிறது.
பொள்ளாச்சி தொகுதிக்கான தேர்தல் செலவினங்கள் தொடர்பான பணிகளை கண்காணிக்க சௌரப் குமார் ராய் என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 04 ) சௌரப் குமார் ராய் மாற்றப்பட்டு புதிய தேர்தல் செலவின பார்வையாளராக ஷிவ் பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அரசியல் கட்சியினரின் செலவு கணக்குகள் உள்ளிட்டவைகளை கண்காணிப்பர் என கலெக்டர் கிராந்தி குமார் தெரிவித்தார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் அடுத்த 2 மணி நேரத்துக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.
சரவணம்பட்டியில் 100% வாக்கு பதிவை வலியுறுத்தி (ஏப்ரல்.7) ஆட்சியர் தலைமையில் பேரணி நடைபெற உள்ளது. கௌசிகா நீர்க்கரங்கள் சார்பில் 100% வாக்கு பதிவை வலியுறுத்தி (ஏப்ரல்.7) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் சரவணம்பட்டியில் இருந்து கணபதி வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது.
தென்னக இரயில்வேயின் புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக ஸ்ரீ எம்.செந்தமிழ் செல்வன் இன்று (ஏப்ரல்.04) பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று கோவை ரயில் நிலையம் பகுதியில் இரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இனி பொதுமக்கள் ரயில்வே இடையே உள்ள அனைத்து தேவைகளையும் இவர் பூர்த்தி செய்வார் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளுக்கு இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 பிரிவு சட்டத்தின் கீழ் நடைபெறும் 2024-25 கல்வியாண்டில் 25 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் தகுதியுள்ள குழந்தைகளை சேர்க்க tnschools.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார.
Sorry, no posts matched your criteria.