Coimbatore

News March 4, 2026

கோவை: 91 வயதில் தேர்தலில் களம்

image

கோவை, வால்பாறை 12-வது வார்டு கருமலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 91 வயது முதியவர் சங்கரதாஸ், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் வால்பாறை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வரும் இவர், தனது முதிர்ந்த வயதிலும் மக்கள் பணியாற்ற ஆர்வம் காட்டி அண்ணா அறிவாலயத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

News March 4, 2026

கோவை: 91 வயதில் தேர்தலில் களம்

image

கோவை, வால்பாறை 12-வது வார்டு கருமலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 91 வயது முதியவர் சங்கரதாஸ், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் வால்பாறை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வரும் இவர், தனது முதிர்ந்த வயதிலும் மக்கள் பணியாற்ற ஆர்வம் காட்டி அண்ணா அறிவாலயத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

News March 4, 2026

அறிவித்தார் கோவை கலெக்டர்

image

கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர்களின் நலன் காக்க, ஏப்ரல் 2026 முதல் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.6 கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் பால் பண்ணை தொழிலை ஊக்கப்படுத்தவும், விவசாயிகளின் வருவாயை உயர்த்தவும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி அனைத்து பால் உற்பத்தியாளர்களும் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் பவன்குமார் அறிவித்துள்ளார்.

News March 3, 2026

கோவை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (03.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 3, 2026

கோவை: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு

image

கோவை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே<> க்ளிக் <<>>செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

கோவை: பட்டாவில் பெயர் திருத்தம் செய்யனுமா?

image

கோவை மக்களே, பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News March 3, 2026

கோவை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News March 3, 2026

கோவை தெற்கு தொகுதியில் இவரா?

image

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவையின் மிக முக்கியத் தொகுதியாகக் கருதப்படும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அக்கட்சியின் மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்தார். இத்தொகுதியில் கடந்த முறை பாஜக சார்பில் போட்டியிட்டு வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற தொகுதியாகும்.

News March 3, 2026

சூலூர் அருகே ஆண் சடலம்!

image

சூலூர் குளத்தின் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!