India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <

பொள்ளாச்சி தேவம்பாடி கிராமத்தைச் சேர்ந்த திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர் அக்கட்சிகளிலிருந்து விலகி, முன்னாள் அமைச்சர் வ.ஜெயராமன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய உறுப்பினர்களைச் சால்வை அணிவித்து வரவேற்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில் இம்மாற்றம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

கோவை எஸ் பி அலுவலகத்தில் எஸ் பி கார்த்திகேயன் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது இதில் குடும்ப பிரச்சினை, இடம் மற்றும் பண பிரச்சினை தொடர்பான 45 மனுக்கள் பொதுமக்களால் கொடுக்கப்பட்டன. இதில் 42 மனுக்களுக்கு சுமூக தீர்வும், இரு மனுக்கள் மீது சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டும், 1 மனு மீது மேல்விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.

கோவை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் 45 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 42 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது; 2 மனுக்கள் மீது சி.எஸ்.ஆர் பதியப்பட்டது. ஒரு மனு மேல் விசாரணைக்கு மாற்றப்பட்டது. பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்டத்தில் இன்று (04.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க

கோவை மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு<

கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட – சுகுணாபுரம் பகுதிகழகம் – இடையர்பாளையத்தில் அமைந்துள்ள அஹ்லே சுன்னத் ஜமாத் தக்னி மஸ்ஜித் & கபர்ஸ்தான் மஸ்ஜித் ஜமாத்தில் நிர்வாகிகளை நேரில் சந்தித்து, தேவைகளை கேட்டறிந்து, கோவை வடக்கு திமுக மாவட்ட செயலாளர் தொ.ரவி நிதியுதவி வழங்கினார். உடன் சுகுணாபுரம் பகுதி செயலாளர் சிவசக்தி, மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

கோவை மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் வேலைக்கேற்ப ₹48,480 முதல் ₹1,20,940/- வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <

சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோவில் மைதானத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் SP.வேலுமணி மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் KR.ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தனர்.
Sorry, no posts matched your criteria.