India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிவகங்கையைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இதுதொடர்பாக கடந்த 4 மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று 3 பேருக்கும் சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடந்த விசாரணையில், சிவகங்கையைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய மூவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.கடந்த 4 மாதங்களாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

ஆண்டுதோறும் ரூ.1000 விதம் 4 ஆண்டுகளுக்கு வழங்க நடத்தப்படும் தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வு தேர்வு கடந்த டிச.25ல் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் வெள்ளியங்காடு அரசு பள்ளியை சேர்ந்த 15 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவன் நாக பிரசாந்த் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கோவை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!

கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், 2026 சட்ட மன்ற தேர்தலில் கோவை வடக்கு தொகுதிக்கு மாற முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் கட்சியின் ஆணிவேரான தெற்கு தொகுதியைக் கைவிடுவது பின்னடைவை ஏற்படுத்தும் என இந்து இயக்கங்கள் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், தொகுதி குறித்து கட்சித் தலைமையே இறுதி முடிவு எடுக்கும் என வானதி விளக்கமளித்துள்ளார்.

கோவை பீளமேடு விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவ.2 ஆம் தேதி நண்பருடன் காரில் அமர்ந்து பேசி கொண்டிருந்த கல்லூரி மாணவி 3 பேர் கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டு கைது செய்யப்பட்டனர். கோவையை உலுக்கிய இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. நீதிபதி – சுந்தர் ராஜன்.
அரசு தரப்பு வக்கீல் – பி. ஜிஷா.
எதிர் தரப்பு வக்கீல் – சசிகுமார்.

கோவைப்பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு கடந்த பிப்.1 முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வெள்ளிங்கிரி 1-வது மலை செல்லும் வழியில் முதியவர் ஒருவர் சுய நினைவின்றி கிடப்பதாக வந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற வனத்துறையினர் டோலிக்கட்டி அவரை தூக்கி வந்தனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் இறந்தது தெரிந்தது. விசாரணையில் அவர் பல்லடம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்று (06.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மக்களே விபத்து காலங்களில் அவசர சிகிச்சைக்காக ‘108’ ஆம்புலன்ஸை அழைப்பதில் ஏற்படும் முகவரி சிக்கல்களைத் தவிர்க்க, தமிழக சுகாதாரத் துறை 94450 30725 என்ற புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விபத்து நிகழ்ந்த இடத்தின் (Location) தகவலைத் துல்லியமாகப் பகிர்ந்து, ஆம்புலன்ஸ் சேவையை விரைவாகப் பெற முடியும். மனித உயிர்களைக் காக்கும் இந்த மிக முக்கியமான தகவலை SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.